districts

img

வாக்குச்சாவடி மையங்களில் மருத்துவக் குழுவினர்

சென்னை, ஏப்.19- வெப்ப அலையினால் வாக்களிக்க வரும் வாக்காளர்கள் பாதிக்கப் பட்டால் முதலுதவி சிகிச்சை அளிக்க வாக்குச்சாவடி மையங்களில் மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்தனர். கடந்த ஒரு மாதமாகவே வெப்பத்தின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஒருவார காலமாக வெப்ப அலை வீசு கிறது. இதனால் பொது மக்கள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் மக்க ளவைத் தேர்தல் நாளான வெள்ளியன்று (ஏப். 19) வெப்ப அலை வீசும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்திருந்தது. எனவே வாக்களிக்க மதிய நேரங்களில் வருப வர்களுக்கு பாதிப்பு ஏற்பட லாம் என பொது சுகா தாரத்துறை தெரிவித்தி ருந்தது. இதையடுத்து வாக்க ளிக்க வரும் வாக்காளர்க ளுக்கு ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் உடனடி யாக மருத்துவ முத லுதவி மேற்கொள்ள வட சென்னை மக்களவை தொகுதிக்குட்பட்ட திருவிக நகர் ஓட்டேரி குக்ஸ் சாலை யில் உள்ள சென்னை உயர்நிலை பள்ளியில் சென்னை மாநகராட்சி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் தயார் நிலையில் இருந்த னர். மேலும் அனைத்து ஆரம்ப சுகாதார நிலை யங்களிலும் மருத்து வர்களும், செவிலியர்களும் தயார் நிலையில் இருந்தனர். பாதிக்கப்பட்டவர்களை மேல் சிகிச்சைக்கு அழைத்து செல்வதற்காக 108 ஆம்புலன்ஸ் வாக னங்களும் தயாராக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.