சென்னை,ஆக.8-
“மக்களைத் தேடி மேயர்” திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி, திருவொற்றியூர் மண்டல அலுவலகத்தில் வியாழ னன்று (ஆக.10) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மேயர் பிரியா பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெறுகிறார்.
மண்டலம்-1க்குட்பட்ட பொதுமக்கள் சாலை வசதி, மழைநீர் வடிகால் வசதி, மின் விளக்கு, கழிப்பிடம், பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ், சொத்துவரி மற்றும் தொழில் வரி, குப் பைகள் அகற்றம், ஆக்கிர மிப்பு அகற்றுதல், குறித்த கோரிக்கை மனுக்களை மேயரிடம் நேரடியாக வழங்கலாம்.