சென்னை.செப்.12- சென்னை தினத்தை முன்னிட்டு சென்னை மாநகராட்சி யின் சார்பில் சென்னை போட்டோ பியனாலே அறக்கட்ட ளையின் மூலம் ஐபோன்களைப் பயன்படுத்தி ஆறு மாத கால புகைப்படப் பட்டறைகளை மூன்று சென்னை பள்ளிகளில், புளியந்தோப்பு தொடக்கப்பள்ளி, பெரம்பூர் மகளிர் மேல்நிலைப்பள்ளி மற்றும் நுங்கம்பாக்கம் ஸ்டெம் பள்ளியில் நடத்தியது. சென்னை பள்ளி மாணவர்கள் எடுத்த நிழற்படங்கங்களை “அக்கம் பக்கம்” என்ற தலைப்பில் ரிப்பன் கட்டிட வளாகத்தில் புகைப்பட கண்காட்சியாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினால் ஆகஸ்ட்-22-ந்தேதி தொடங்கி வைக்கப்பட்டது. இந்த கண்காட்சி கடந்த 10-ந்தேதி நிறைவு பெற்றதைத் தொடர்ந்து அந்த கண்காட்சியில் இடம் பெற்ற புகைப்படங்களை எடுத்த சென்னை பள்ளி மாணவர்களை பாராட்டி மேயர் பிரியா ரிப்பன் கட்டிட அலுவலக கூட்டரங்கில் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி அவர்களுடன் குழுப் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.