districts

img

மோடி அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் மாதர் சங்கம் பிரச்சாரம்

சிதம்பரம், செப். 27- ஒன்றிய பாஜக அரசின் பெண்கள் விரோத கொள்கைகளை கண்டித்து அனைத்திந்திய ஜன நாயக மாதர் சங்கம் சார்பில் சிதம்பரத்தில் பிரச்சார பொதுக்கூட்டம் நடை பெற்றது. இந்தக் கூட்டத்திற்கு மாதர் சங்க மாவட்டத் தலைவர் மல்லிகா தலைமை தாங்கி னார்.  சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா பேசுகையில், “சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் மற்றும் உணவுப் பொருட்களின் விலைகளை உயர்த்திய ஒன்றிய பாஜக அரசு, பெண்கள் மீதான பாலியல் வன்முறையை தடுத்து நிறுத்த எந்த நடவடிக்கையும் எடுக்க வில்லை”என்றார். இந்த கூட்டத்தில் சங்கத்தின் மாநில செயற் குழு உறுப்பினர் மேரி, மாவட்ட துணைத் தலைவர் தேன்மொழி, மாவட்ட துணைச் செயலாளர்கள் அன்புச்செல்வி, ஜெயசித்ரா உள்ளிட்ட பலர் பேசினர்.