கடலூர், ஆக.6-
இளம் பெண் கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த வழக்கில் மூன்று வாலிபர்களுக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை விதித்த கடலூர் நீதிமன்ற தீர்ப்பை மாதர் சங்கம் வரவேற்றுள்ளது.
இது குறித்து அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மாநில உறுப்பினர் வி.மேரி வெளியிட்ட அறிக்கையில், “ கடலூர் மாவட்டம், நெய்வேலி அருகே ஊத்தங்கால் பகுதியைச் சேர்ந்த விஜய், அவனது கூட்டாளிகள் மூன்று பேரும் இளம் பெண் ஒருவரை கூட்டு பாலி யல் வன்புணர்ச்சி செய்தனர். பாதிக்க ப்பட்ட பெண் மற்றும் அவரது பெற்றோர் மாதர் சங்கத்திடம் முறையிட்ட னர். அதனைத் தொடர்ந்து, காவல் துறையில் புகார் செய்து, வழக்குப் பதிவு செய்து குற்றப்பத்திரிகையை தாக்கல் செய்யப்பட்டது.
பின்னர், நீதிமன்றத்தில் நடந்த வழக்கு விசாரணைக்கு மாதர் சங்கம் முழுமையான ஒத்துழைப்பு கொடுத்தது. குற்றவாளிகளில் ஒருவர் மரணமடைந்து விட்ட நிலையில், நீதிபதி அளித்த தனது தீர்ப்பில், குற்றவாளி கள் மூன்று பேருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனையும், தலா ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்தும், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பை மாதர் சங்கம் முழுமையாக வரவேற்கிறது.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.