புதுச்சேரி,அக்.18- அக்டோபர் 17 வறுமை ஒழிப்பு தினத்தையொட்டி புதுச்சேரி சுதேசி பஞ்சாலை எதிரில் நடை பெற்ற தீபாவளி தெருக் கூத்து நிகழ்ச்சிக்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் புதுச்சேரி மாநில தலைவர் டி.ஜி.முனியம் மாள் தலைமை தாங்கினர். சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் சுதா சுந்தரராமன் தெருக் கூத்து நையாண்டி நிகழ்ச்சியை துவக்கி வைத்து பேசினார். மாநில செயலாளர் இளவரசி, நிர்வாகிகள் சத்தியா,உமா சாந்தி உட்பட திரளான பெண்கள் இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். முன்னதாக பெண்கள் தெருக்கூத்து கலைஞர்களை போல் ஆட்சியாளர்களின் அவ ளத்தை கண்டித்து நையாண்டி செய்து நடித்து காட்டினர். இந்த நிகழ்ச்சியில் பண்டிகை கால சிறப்பு அங்காடிகள் நகராட்சி மற்றும் கொம்யூன் வாரி யாக திறக்க வேண்டும். மூடிகிடக்கும் ரேசன் கடைகளை திறந்து அத்தி யாவசியப் பொருட்களை வழங்க வேண்டும் உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.