districts

img

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாதர் சங்கம் மருத்துவ முகாம்

சென்னை, டிச. 18- திருவொற்றியூர் 4ஆவது  வார்டு முல்லை நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தமிழ்நாடு மருத்துவ அலுவலர் சங்கம்,  அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் மருத் துவ முகாம் நடைபெற்றது. மிக்ஜம் புயல் மழை யால் திருவொற்றியூர் 4, 6, 7, வார்டுகள் மற்றும் பக்கிங்காம் கெனால் ஒட்டிய பகுதிகள், கொசஸ் தலையாறு பயணிக்கும் மணலி சடையங்குப்பம் பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டது. மேலும் சிபிசிஎல் நிறுவனத்தில் இருந்து வெளியேறிய ஆயில் கழிவுகள் பல்லா யிரக்கணக்கான வீடுகளில் புகுந்தது. இதனால் அந்த பகுதிகளில் வசிக்கும் மக்க ளுக்கு தோல் நோய் ஏற்பட்டது. இதையடுத்து தமிழ் நாடு மருத்துவ அலுவலர்  சங்கம் மற்றும் அனைத்திந் திய மாதர் சங்கம் சார்பில்  மருத்துவ முகாம் நடை பெற்றது. 40,000 ரூபாய் மதிப்பிலான மருந்துகள் மருத்துவ முகாமில் வழங் கப்பட்டன. பாதிக்கப்பட்ட வர்களுக்கு  மருத்துவர்கள் அகிலன், மகாலிங்கம் ஆகி யோர் மருத்துவ ஆலோ சனைகளை வழங்கினர். இதில் மாதர் சங்கத் தின் மாநிலச் செயலாளர் ஆர்.ராதிகா, மாநிலப் பொருளாளர் பிரமிளா, வடசென்னை மாவட்டச் செயலாளர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதி நிர்வாகிகள் அலமேலு, செல்வக்குமாரி, கஸ்தூரி, மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், முல்லை நகர் நிர்வாகிகள் கோபால கிருஷ்ணன், பொன்னம் பலம், பழனிச்சாமி, ஜனார்த்  தனன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.