districts

img

போதை பொருட்கள் விற்பனையை தடுக்க மாதர் சங்கம் கோரிக்கை

ராணிப்பேட்டை. ஜூலை 9 - அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ராணிப்பேட்டை தாலுகா 9 ஆவது மாநாட்டிற்கு புஷ்பா, உமாதேவி, தமயந்தி ஆகியோர் தலைமை வகித்தனர். ஆர்.சங்கீதா வரவேற்றார். சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.டி.சங்கரி மாநாட்டை துவக்கி வைத்தும், மாவட்டக் குழு உறுப்பினர் ஆர்.திலகா நிறைவு செய்தும் பேசினர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன், எல்.சி.மணி (விவசாயிகள் சங்கம்) டி.சந்திரன்( விவசாயத் தொழிலாளர் சங்கம்), ரஜினிகாந்த்(தமுஎகச) ஆகியோர் வாழ்த்திப் பேசினர். தலைவராக ஆர். கீதா, செயலாளராக ஆர். சங்கீதா, பொருளாளராக எம். உமாதேவி உள்ளிட்ட புதிய நிர்வாகிகளாக தேர்வு செய்யப்பட்டனர். வாலாஜாவிலுள்ள மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தி, போதுமான ஊழியர்களை நியமிக்க வேண்டும், மாவட்டம் முழுவதும் அதிகமாக புழக்கத்தில் உள்ள கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை தடுக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

;