districts

பாமக பிரமுகர் படுகொலை 4 பேர் மீது குண்டர் சட்டம்

வண்டலூர்,ஜூலை 16-

    செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் நகராட்சிக்கு உட்பட்ட காட்டூர் பகுதியை சேர்ந்தவர் காளிதாஸ்(35). பா.ம.க.வை சேர்ந்த இவர் செங்கல்பட்டு மத்திய மாவட்ட வன்னியர் சங்க மாவட்ட தலைவராக இருந்தார்.

     கடந்த மாதம் 12-ந் தேதி மதியம் காளிதாஸ், மறைமலைநகரில் உள்ள கடையில் டீ குடித்து கொண்டு இருந்தபோது மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் 4 பேர் எழும்பூரில் உள்ள குற்றவியல் நீதிமன்றத்தில் சரண் அடைந்தனர். மேலும் மறைமலைநகர் போலீஸ் நிலையத்தில் ஒருவர் சரணடைந்தார். 2 பேரை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த கொலை வழக்கில் மொத்தம் 7 பேர் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். இந்தநிலையில், முக்கிய குற்றவாளிகளான மறைமலைநகர் பகுதியை சேர்ந்த சபரி என்ற சபரிநாதன், வெங்கடேஷ், பார்த்திபன், சிங்க பெருமாள் கோவில் பகுதியை சேர்ந்த பாலாஜி ஆகிய 4 பேரை குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க தாம்பரம் மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் உத்தரவிட்டார்.

   இதைத்தொடர்ந்து அவர்கள் 4 பேர் மீதும் குண்டர் சட்டம் பாய்ந்தது. இதற்கான உத்தரவை மறைமலைநகர் காவல்நிலைய ஆய்வாளர் முத்து சுப்பிரமணியம் புழல் சிறையில் உள்ள அதிகாரிகளிடம் வழங்கினார். குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட சபரி உள்ளிட்ட 4 பேர் மீதும் ஏற்கெனவே கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளது.