செங்கல்பட்டு, டிச.23- உடல்நலக்குறைவால் காலமான மூத்த தோழர் என்.மோகனுக்கு மார்க்சிஸ்ட் கட்சி யின் செங்கல்பட்டு மாவட்ட குழு இரங்கலை தெரிவித்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம், செய்யூர் வட்டம், சூனாம்பேடு அடுத்த வில்லி வாக்கத்தைச் சேர்ந்தவர் தோழர் என்.மோகன். 1978 இல் தன்னை மார்க்சிஸ்ட் கட்சியில் இணைத்துக் கொண்டு செய்யூர் வட்டத்தில் கட்சியை உருவாக்குவதில் பெரும் பங்காற்றியவர். மேலும் ஒன்றுபட்ட காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டத்தில் கட்டுமான தொழிலாளர் சங்கத்தை உருவாக்கு வதில் ஸ்தாபக தலைவராக செயல்பட்டவர். முறைசாரா சங்கம், தமிழ்நாடு விவசாயிகள் சங்கம், விவசாய தொழி லாளர்கள் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் செய்யூர் வட்டத்தில் உருவாக காரணமாக இருந்தவர். உடல் நல குறைவு மற்றும் வயது மூப்பால் சனிக்கிழமை யன்று (டிச. 23) சூனாம்பேடு கிராமத்தில் காலமானார். அவரது இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த உடலக்கு மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.சங்கர், வி.அரிகிருஷ்ணன், க.புருஷோத்தமன், க.பகத்சிங் தாஸ், பகுதி குழு செயலாளர்கள் எஸ்.ரவி, எஸ்.ராஜா, கே.வேலன், மாவட்டக்குழு உறுப்பினர்கள் பி.மாசிலாமணி, எம்.எஸ்.அர்ஜுன் குமார் எழுத்தாளர்கள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் கவி சேகர், மாவட்டப் பொருளாளர் ரங்கநாதன், கட்டுமான சங்க மாவட்டச் செயலாளர் டி.பாபு, மாற்றுத்திறனாளிகள் சங்க மாவட்டத் தலைவர் வல்லிக்கண்ணன் மற்றும் வட்ட குழு, கிளை செயலாளர்கள் சூனாம்பேடு பகுதி மக்கள் அஞ்சலி செலுத்தினர். அவரது உடல் மாலை சூனாம்பேட்டில் நடைபெற்றது.