மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரிக்கை
சிதம்பரம், மே.20- பரங்கிப்பேட்டை தனியார் அனல்மின் நிலையம் கொரோனா காலத்தில் சிஎஸ்ஆர் நிதியில் இருந்து பொதுமக்களுக்கு உதவி செய்ய வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது. இதுகுறித்து ஒன்றியச் செயலாளர் ரமேஷ்பாபு சார் ஆட்சியரிடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: புவனகிரி வட்டம் பரங்கிப்பேட்டை ஒன்றியம் கரிகுப்பம் அருகில் ஐஎல்&எப்.எஸ். அனல் மின் நிலையம் உள்ளது. இந்த நிறுவனத்தை சுற்றி 7க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருளர் மற்றும் தலித் மக்களில் குடியிருப்புகள் உள்ளது. இந்த நிறுவனம் அங்குள்ள கிராம மக்களின் 2,000 ஏக்கருக்கும் அதிகமான விவசாய நிலங்களில்தான் உருவாக்கப்பட்டது. அந்த விவசாய நிலங்களை நம்பி வாழ்ந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் வேறு வேலை தேடி அலைய நேரிட்டது. கொரோனா தொற்றின் முதல் அலையின்போது பொது முடக்கத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட அருகில் உள்ள கிராம மக்களுக்கு, பெரிய நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியிலிருந்து உதவி செய்திட மேண்டும் என பலமுறை கோரிக்கை வைத்தும் அந்த மக்களுக்கு எந்த உதவியும் செய்யவில்லை. பெரிய நிறுவனங்கள் தங்கள் வருமானத்தில் சமூக ஆக்க பணிகளுக்கும், இந்த நிறுவனம் வருகையால் பாதிக்கப்படும் மக்களின் வாழ்வாதரத்திற்கு உதவி செய்யவும் சமூக பொறுப்பு நிதியை பயன்படுத்துதல் அவசியாமாகும். ஆனால் இந்த நிறுவனம் அப்படி செய்ததாக இதுவரை தெரியவில்லை. என குறிப்பிட்டுள்ளார். எனவே கொரோனா இரண்டாம் அலையால் பாதிக்கப்பட்ட்ட, பொதுமுடக்கதால் வாழ்வாதரம் இழந்துள்ள அப்பகுதி மக்களுக்கு உடனடியாக பெரிய நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியிலிருந்து உதவி செய்வதை தாங்கள் தலையிட்டு உறுதி செய்ய வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.