districts

img

தடையில்லா மின்சாராம் வழங்கிடுக:

சென்னை, நவ. 25- திருவொற்றியூர் மேற்கு பகுதியான 4, 6, 7 வார்டு களில் அடிக்கடி ஏற்படும் மின்சாரத் தடையை  சீர மைக்கக் கோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, நகர் நலச் சங்கங்கள் சார்பில் சனிக்கிழமை (நவ. 25) சத்தியமூர்த்தி நகரில் இருந்து மெழுகுவர்த்தி ஏந்தி ஊர்வலமாக ஜோதி நகர் மின்வாரிய அலுவலகம் வரை சென்றனர். பின்னர் அங்கு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஒன்றிய அரசின் நவீன தாரளமயக் கொள்கை சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் மின்வாரியம் இரண்டு கழகங்களாக பிரிக்கப்பட்டு, தனியாருக்கு கொடுக்கப்பட்டது. இத னால் ஒப்பந்தமுறை, அவுட் சோர்ஸ் நடைமுறைகளை தமிழ்நாட்டிலும் நடைமுறை படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் காலிப் பணியிடங்கள் நிரப்பபடா மல் ஊழியர் இல்லாத நிலை உள்ளது. சாத்தங்காடு, எர்ணாவூர் (ஜோதி நகர்) மின் பகிர்மான அலுவ லகங்களில் ஒரு ஆண் டுக்கு மேலாக உதவி பொறி யாளர் இல்லாத நிலை நீடிக்கிறது. மின் பழுது புகார்களை கேட்பதற்கு அலுவலகத்தில் ஆட்கள் இல்லை. மழைநீர் கால்வாய் பணிகள் நடைபெற்றதால் அகற்றப்பட்ட மின் பகிர்மான பில்லர்கள் நடு ரோட்டில் நிற்கின்றன. இரவு பகல் என அடிக்கடி மின்தடை ஏற்படுகிறது. மேலும் குறைந்த மின் அழுத்தத் தால் மின்சாதனங்கள் பழு தடைகின்றன. எனவே சீரான மின் அழுத்தத்தில் தடை யில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தி னர். ஜோதிநகர் மின்பகிர் மான வட்டத்தில் தனி துணை மின் நிலையம் அமைக்க வேண்டும்,

திரு வொற்றியூர் முழுவதும் 11 கி.வோ.இல் ஏற்படும் பழுதுகளை உடனுக்குடன் சரிசெய்ய நடமாடும் மோபைல் பழுது பார்க்கும் வாகனம் அமைக்க வேண்டும், சாத்தங்காடு, ஜோதிநகர் மின்பகிர்மான வட்டங்களுக்கு தனி உதவி பொறியாளர்  மற்றும் போது மான ஊழியர்கள் நியமிக்க வேண்டும். சாத்தங்காடு, ஜோதி நகர் மின்பகிர்மான வட்டங்க ளுக்கு எப்.ஓ.சி. வசதி ஏற்படுத்த வேண்டும், எண்ணூர், ஜோதிநகர், சாத்தங்காடு மின்பகிர்மான வட்டங்களில் புகார் பதிவு செய்ய 24 மணி நேரமும் ஊழியர்கள் இருப் பதை உறுதி செய்ய வேண்டும், ஆதிதிராவிடர் காலணி மற்றும் அரசு நிலங்களில் குடியிருக்கும் குடும்பங்களுக்கு மின் இனைப்பு வழங்க மறுக்கக் கூடாது, மேல்நிலை மின் கம்பிகளை மாற்றி புதை வட கேபில்கள் அமைக்க வேண்டும். எர்ணேஸ்வரன் நகர் கிரிஜா நகர் சண்முகபுரம் போன்ற இடங்களில் பாது காப்பற்ற நிலையில் உள்ள பில்லர்கள், கேபில்களை முறைப்படுத்த வேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை கைவிட வேண்டும் உள் ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.  மாவட்டக் குழு உறுப்பி னர் ஆர்.கருணாநிதி தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் மாநிலக் குழு உறுப்பினர் எம்.ராமகிருஷ்ணன், 4ஆவது வட்ட மாமன்ற உறுப்பினர் ஆர்.ஜெயராமன், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.பாக்கியலட்சுமி, பகுதிச் செயலாளர் எஸ்.கதிர்வேல், மாவட்டக்குழு உறுப்பினர் செல்வகுமாரி, பகுதிக் குழு உறுப்பினர்கள் அருமைராஜ், அல மேலு, சதிஸ்குமார், வெங்கட்டையா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.