districts

img

இல்லம் தேடி மருத்துவத்தால் பலரது உயிர் காப்பற்றப்பட்டுள்ளது

சென்னை, செப்.29- தமிழக அரசின் இல்லம் தேடி மருத்துவத்திட்டத்தால் பலரது உயிர் காப்பாற்றப் பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.  சென்னை வடபழனி காவேரி மருத்துவமனையில் இதய சிகிச்சைக்கான சிறப்பு மையத்தை வெள்ளிக்கிழமை துவக்கி வைத்துப்பேசிய அவர், அரசு நடத்திய சிறப்பு முகாமிற்கு வருபவர்க ளுக்கு தங்களுக்கு உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை, இதயம் உள்ளிட்ட நோய்கள் ஏற்பட்டிருப்பதை அறியாமல்இருப்பதை கண்டுபிடித்துள்ளோம்.இதற்கு முன்பு மருத்துவ மனைக்கு சென்றீர்களா என்றால் செல்லவில்லை என்பார்கள், பிபி இருப்பது தெரியமா என்றால் தெரி யாது என்பார்கள். மாநிலத்தில் மருத்துவம் வேகமாக வளர்ந்தும்கூட மக்களுக்கு விழிப்புணர்வு இல்லை என்று வேதனை தெரிவித்தார். அந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக காவேரி மருத்துவமனை இதய நோய்க்கு சிகிச்சை அளிக்க சிறப்பு மையத்தை ஏற்படுத்தியுள்ளதை பாராட்டுவதாகவும் அவர் கூறினார். இதயத்தை பாதுகாத்துக்கொள்ள மக்கள் முன்வரவேண்டும் என்றும் மருத்துவர்களின் தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார். காவேரி மருத்துவமனை யின் மருத்துவ இயக்குநர் டாக்டர் ஐயப்பன் பொன்னு சாமி, மருத்துவ மனையின் இதயநோய் நிபுணர்கள் டாக்டர் ஜோதிர்மயா தாஷ், டாக்டர் வி. மகாதேவன் உள்பட பலர் இதில் கலந்துகொண்டனர். காவேரி ஹார்ட் இன்ஸ்டி டியூட், அதிநவீன தொழில் நுட்பத்துடன் மிகவும் திறமையான இதய நிபுணர்களின் வழிகாட்டு தல் குழுவோடு இயங்கும். சர்வதேச தரத்தில் மிக உயர்வான மற்றும் விரிவான இருதய சிகிச்சையை வழங்குவதை நோக்கமாக இது கொண்டுள்ளது. இந்த நிறுவனம் இத யம் தொடர்பான நோய் களைக் கண்டறிதல், சிகிச்சையளித்தல், மற்றும் தடுப்பதற்கான மையமாகச் செயல்படும் என டாக்டர் வி.மகாதேவன் கூறினார்.