விழுப்புரம்,டிச.11- மாண்டஸ் புயல் வலுவிழந்து கரையை கடந்ததால் விழுப்புரம் மாவட்டம் தப்பியது. அதே சமயம் கடற்கரை கிராமங்களில் வீடுகள் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன. இப்புயல் காரணமாக கோட்டக்குப்பம் அருகே உள்ள பிள்ளைச்சாவடி கிராமத்தில் மொத்தம் 15 வீடுகள் முழுமையாக கடலுக்குள் அடித்துச்சென்று விட்டது. தென்னை மரங்களும், பலத்த காற்றுக்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேரோடு சாய்ந்து விழுந்து கடலுக்குள் இழுத்துச்செல்லப்பட்டன. தீவிர புயலாக இருந்த மாண்டஸ் புயல் வலு விழந்து கரையை கடந்ததால் பெரியள வில் எந்தவித பாதிப்பும் ஏற்படாமல் விழுப்புரம் மாவட்டம் தப்பியது. மீனவ கிராமங்களில் மட்டும் வீடுகள் சேதமடைந்தும், 13 இடங்களில் மரங்கள் முறிந்தும் பாதிப்புகள் ஏற்பட்டன. மற்ற பகுதிகளில் மித மான மழையாக பெய்ததால் புயல் பாதிப்புகள் ஏதும் இல்லை.
கடல்போல் காட்சியளிக்கும் வீடுர் அணை
இதனிடையே சனிக்கிழமை காலை மழை ஓய்ந்த நிலையில், சாய்ந்து விழுந்த மரங்களை மீட்புக்குழுவினர் உடனடியாக சென்று அகற்றி போக்கு வரத்தை சரிசெய்தனர். அதேபோல் பலத்த காற்றினால் அறுந்து கிடந்த மின் கம்பிகளை மின்வாரிய ஊழி யர்கள் சரிசெய்து சீரான மின் வினி யோகத்திற்கு வழிவகை செய்தனர். செஞ்சி, மேல்மலையனுார், பனமலை பேட்டை ஆகிய பகுதிகளில் மாண்டஸ் புயலால் மழை பெய்தது. இதனால் தண்ணீர் வந்ததால் வீடூர் அணையின் நீர்மட்டம் 32 அடியிலிருந்து 29 அடியாக உயர்ந்தது. இதனால் வீடூர் அணை கடல்போல் காட்சி அளிக்கிறது. அணைக்கு வினாடிக்கு 112 கன அடிநீர் வந்து கொண்டிருக்கிறது. மழையளவு விழுப்புரம் மாவட்டத்தில் மரக்காணத்தில் -38மி.மீ, அவலூர்பேட்டையில்-38, செஞ்சியில் -36, செம்மேட்டில்-33.40, திண்டிவனத்தில் -31, வானூரில்-28, முண்டியம்பாக்கத்தில்-22, விழுப்புரத்தில் -18,வல்லத்தில்-18, கோலியனூரில்-16, அனந்த புரத்தில்-16, வளவனூரில்-14, கெடாரில்-12, சூரப்பட்டில்-12, திருவெண்ணெய்நல்லூரில்-11, கஞ்சனூரில்-10, அரசூரில்-10, மணம்பூண்டில்-9, நேமூரில்-8, வளத்தியில்-6, முகையூரில்-6 ஆகிய இடங்களில் மழை பெய்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.