districts

img

மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம்

மாமேதை லெனின்  நூற்றாண்டு நினைவு கருத்தரங்கம் செங்கல்பட்டு, ஜனக்.22- மாமேதை லெனின் நூற்றாண்டு நினைவு நாள் கருத்தரங்கம் இடதுசாரி கட்சிகளின் ஒருங்கிணைப்பு குழு வின் சார்பில் செங்கல்பட்டு மாவட்டம் சிங்கப்பெருமாள் கோவிலில் ஞாயிறன்று (ஜனவரி 21) மார்க்சிஸ்ட் கட்சியின்  மாவட்ட குழு உறுப்பினர் நாராயணன் தலைமையில் நடைபெற்றது.   அரசும் புரட்சியும் லெனின் என்ற தலைப்பில் மார்க்சிஸ்ட் கட்சி மாநில செயற்குழு உறுப்பினர் என்.குணசேகரன் லெனினும் அறிவியலும் என்ற தலைப்பில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் ஆர்.ரவிந்திரநாத், லெனின் பார்வையில் சமூகப் புரட்சி என்ற தலைப்பில் சிபிஐஎம்எல் மாநில கமிட்டி  உறுப்பினர் சொ.இரணியப்பன், லெனின் பார்வையில் ஏகாதிபத்தியம் என்ற தலைப்பில் பாட்டாளி வர்க்க சமர அணியின் நிர்வாகி எம்.மனோகரன் ஆகியோரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா, சிபிஐ மாவட்ட செயலாளர் எ.ராஜ்குமார்,  சிபிஐஎம்எல் மாவட்ட கமிட்டி உறுப்பினர் மூ.தினேஷ்குமார்,  பாட்டாளி வர்க்க சமர அணியின் நிர்வாகி பொ.கார்த்தி கேயன் உள்ளிட்ட பலர் கருத்துறை வழங்கினர் மார்க்சிஸ்ட் கட்சியின் கிளைச் செயலாளர் எம்.வெங்கடே சன் நன்றி கூறினார்.