சென்னை, பிப்.20 - பராமரிப்பு பணிகள் காரணமாக செவ்வாயன்று (பிப்.22) ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித் துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிடப் பட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் - கூடூர் ரயில் பாதைகளில் செவ்வாயன்று (பிப். 22) பராமரிப்பு பணிகள் மேற் கொள்ளப்பட உள்ளன. அதன் காரணமாக ஒருசில ரயில்கள் ரத்து செய்யப்பட உள்ளன. அந்த வகையில் விஜயவாடா- சென்னை சென்ட்ரல் இடையே (12711) காலை 6.10 மணிக்கு இயக்கப் படும் எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்படுகிறது. அதேபோல் சென்னை சென்ட்ரல்-விஜயவாடா இடையே இயக்கப்படும் பினாகினி எக்ஸ்பிரஸ் (12712) பிற்பகல் 2.10 மணிக்கு ரத்து செய்யப்படு கிறது. இவை தவிர நெல்லூர் - சூலூர்பேட்டை இடையே (06746) காலை 10.15 மணிக்கு இயக்கப்படும் ரயில், சூலூர்பேட்டை - நெல்லூர் இடையே (06745) காலை 7.45 மணிக்கு இயக்கப்படும் ரயில் ஆகியவையும் ரத்து செய்யப்படுகின்றன. சூலூர்பேட்டை-மூர் மார்க்கெட் இடையே (06742) பிற்பகல் 12.35 மணிக்கு இயக்கப்படும் ரயில், மூர்மார்க்கெட்- சூலூர் பேட்டை இடையே (06741) காலை 4.25 மணிக்கு இயக்க ப்படும் ரயில், ஆவடி- மூர்மார் க்கெட் இடையே (66000) காலை 4.25 மணிக்கு இயக்க ப்படும் ரயில், மூர் மார்க்கெட்- ஆவடி இடையே (6603) இரவு 9.15 மணிக்கு இயக்கப்படும் ரயில்கள் ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.