சென்னை சொசைட்டியில் நடைபெறும் ஊழல்களை கண்டித்து அனைத்திந்திய பிஎஸ்என்எல் டிஓடி ஓய்வூதியர் சங்கம் சார்பில் மெயில் அனுப்பும் ஆர்ப்பாட்டம் புதனன்று திருச்சியில் நடைபெற்றது. தொலை தொடர்புத்துறை மண்டல பொது மேலாளர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு பிஎஸ்என்எல்இயூ மாவட்டச் செயலர் சுந்தரராஜ், ஏஐபிடிபிஏ மாநிலப் பொருளாளர் அஸ்லம் பாஷா, மாநிலச் செயற்குழு உறுப்பினர் தேவராஜ், மாவட்டச் செயலாளர் சின்னையன் ஆகியோர் கலந்து கொண்டனர்.