இந்தியா கூட்டணி சார்பில் திருபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு போட்டியிடுகிறார். இந்த தேர்தலில் களப்பணியாற்றுவது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மதுரவாயல் பகுதி முன்னணி ஊழியர் கூட்டம் செவ்வாயன்று (மார்ச் 26) நெற்குன்றத்தில் நடைபெற்றது. பகுதிச் செயலாளர் வி.தாமஸ் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், திமுக மாவட்ட அவைத் தலைவர் குணசேகரன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செயலாளர் ஆர்.வேல்முருகன், காரம்பாக்கம் க.கணபதி எம்எல்ஏ, மாநகராட்சி 11வது மண்டலக்குழுத் தலைவர் வே.ராஜன், திமுக வில்லிவாக்கம் ஒன்றிய செயலாளர் அ.ம.துரைவீரமணி, சிபிஎம் தென்சென்னை மாவட்டக்குழு உறுப்பினர் எஸ்.சரவணசெல்வி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.