அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மதுரவாயல் பகுதி சார்பில் முகப்பேர் மேற்கில் ‘மதநல்லிணக்க, மக்கள் ஒற்றுமை சமத்துவ பொங்கல் விழா’ நடைபெற்றது. பகுதி தலைவர் கவிதா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தென்சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, துணைத் தலைவர் பிச்சையம்மாள், 91வது வார்டு மாமன்ற உறுப்பினர் மாலினி, பகுதி செயலாளர் சித்ரா, பொருளாளர் விஜயலட்சுமி உள்ளிட்டோர் பேசினர்.