districts

img

கழிப்பிட வசதியின்றி தவிக்கும் மதகொண்டப்பள்ளி தலித் மக்கள்

கிருஷ்ணகிரி,ஏப்.25 - ஓசூர் தளி சாலையில் தேன்கனிக்கோட்டை வட்டத்தில் உள்ளது மத கொண்டபள்ளி. தளி ஒன்றி யத்தில் அமைந்துள்ள இங்கு இரண்டு பெரிய தனி யார் பள்ளிகளும் மிகப் பழமையான அரசு உதவி பெறும் மேல் நிலைப் பள்ளியும்,அரசு மேல் நிலைப்பள்ளியும் உள்ளது. சுமார் ஆயிரம் குடி யிருப்புகள் கொண்ட இந்த கிராமத்தை சுற்றி லும் பல தொழிற்சாலைகள்  இயங்கி வருகின்றன. இங்குள்ள கிராமத்தின் கடைக்கோடியில் 70 க்கும் மேற்பட்ட தலித் குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். மிகப் பழமையான இப்பகுதிக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு சிமெண்டிலான தெருக்கள் அமைக்கப்பட்டது. தெருக்களின் இருபுற மும் கழிவுநீர் கால்வாய் அமைக்காததால் வீடு களிலிருந்து வெளியேறும் கழிவுநீர் தெருவெங்கும் தேங்கி  துர்நாற்றம் வீசு கிறது. 60 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள இந்த பகுதியில் 50 விழுக்காட்டி ற்கும் மேற்பட்ட வீடுக ளுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை. ஒரு சில வீடுகள் தவிர அனைத்து வீடுகளிலும் உள்ளவர்கள் காலைக் கடன்களை முடிக்க வெகு தூரம் நடந்து செல்ல வேண்டியுள்ளது. இதில் பெண்கள் காலைக்கடனை முடித்திட கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இங்கு கடந்த 2011 இல் நான்கு கழிப்பறைகள் கொண்ட வளாகம் ஒன்று கட்டப்பட்டது. சில மாதங்களிலேயே தண்ணீர் வசதி இல்லாததாலும் பராமரிக்கப்படாததாலும் பூட்டு போடப்பட்டது. இதுவரை திறக்கப்படா மலும் கடும் துர்நாற்றத்துட னும் உள்ளது. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் சுகாதாரசீர்கேட்டுக்கு இலக்காகி வருகின்றனர். மக்கள் வரிப்பணத்தில் கட்டப்பட்ட பொது கழிப்பி டங்களை சீர்படுத்தி உப யோகத்திற்கு கொண்டு வர வேண்டும், தெருவில் இரு புறமும் கழிவு நீர் கால்வாய் அமைத்துத்தர வேண்டும்.  குடிநீர் வசதி செய்து தர வேண்டும், அனைத்து வீடுகளுக்கும் உட னடியாக பட்டாக்கள் வழங்கவேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திடம் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. மக்களின் கோரிக்கைகளுக்கு அரசு அதிகாரிகள் செவி சாய்க்காத பட்சத்தில் மத கொண்டப்பள்ளி பேருந்து நிலையம் அருகில் போராட்டம் நடத்த உள்ள தாக வாலிபர் சங்க கிளை நிர்வாகிகள் முருகேசன்,  மது, முத்துக்குமார், மனோஜ் குமார் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.