தீக்கதிர் இடைக்குழு செயலாளராக எம். உஷா தேர்வு சென்னை,டிச. 5- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தீக்கதிர் சென்னைப்பதிப்பு இடைக்குழு செயலாளராக எம்.உஷா தேர்வு செய்யப்பட்டுள்ளார். சைதாப்பேட்டையில் உள்ள தீக்கதிர் அலுவலகத்தில் புதன்கிழமை (டிச.5) அ.விஜயகுமார், ராமகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற மாநாட்டில் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் சி.கல்யாணசுந்தரம் செங்கொடியை ஏற்றிவைத்தார். அ.நேசமணி வரவேற்றார். அஞ்சலி தீர்மானத்தை நூர்தீன் வாசித்தார். மாநாட்டை துவக்கிவைத்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் ராமலிங்கம் பேசினார். வேலை அறிக்கையை இடைக்குழு செயலாளர் மா.உஷாராணி சமர்பித்தார். கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் என்.சீனிவாசன் மாநாட்டை வாழ்த்திப்பேசினார். மாநாட்டில் 5பேர் கொண்ட இடைக்குழு செயலாளராக உஷாராணி தேர்வு செய்யப்பட்டார். மாநாட்டை நிறைவு செய்து கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் எம்.என்.எஸ்.வெங்கட்ராமன் உரையாற்றினார். கொரோனா தொற்று உச்சத்தில் இருந்தபோது தீக்கதிர் தொடர்ந்து வெளிவர உதவிய அச்சகம், ஆசிரியர் குழு, விநியோகப்பிரிவு தோழர்கள் மாநாட்டில் பாராட்டப்பட்டனர்.