சிதம்பரம், அக். 2- நாடு முழுவதும் காந்தி ஜெயந்தி விழா அக்டோபர் 2ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்நாளில் மதுபான கடை களை மூட வேண்டும் என ஏற்கனவே அரசு உத்தர விட்டிருந்தது. மேலும் இந்த நாளில் கிராமசபை கூட்டங்கள், சமூக நல்லிணக்கன உறுதி மொழி, மதுவுக்கு எதிரான முழக்கங்களை முன்னெடுத்து பல்வேறு அமைப்புகள் காந்தி சிலைக்கு மாலை அணி வித்து உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். இந்நிலையில் சிதம்பரம் பேருந்து நிலை யம் வாயிலில் 2 டாஸ்மாக் கடைகளின் வெளியே சுதந்திரமாக மது பான பாட்டில்கள் விற்பனை யாகின. வழக்கம் போல் கடை திறந்து இருக்கும் நேரத்தில் வருவது போல் அதிகாலையில் இருந்தே ஏராளமானோர் வந்து மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். ஒரு பாட்டிலின் விலை ரூ 200 முதல் 300 வரை விற்பனை செய்யப்பட்டதாகக் கூறப் படுகிறது. காவல்துறை, வருவாய் துறை, கலால் உள்ளிட்ட எந்த துறையும் மது விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வில்லை என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேருந்து நிலையத்தின் வாயிலில் புறகாவல் நிலையம் உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த டாஸ்மாக் கடையை அகற்ற நடவடிகை எடுக்க வேண்டும் என்று கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் சிதம்பரம் கோட்டாட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது இதேபோல் சிதம்பரம், புவனகிரி, காட்டு மன்னார்கோவில், கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பெருபான்மையான இடங்களில் டாஸ்மாக் கடைகளில் மதுபான பாட்டில்கள் விற்பனை நடைபெற்றது.