districts

சென்னை முக்கிய செய்திகள்

சென்னையில் கல்லூரி மாணவியை  கொலை செய்தவருக்கு ஆயுள்சிறை

மகளிர் நீதிமன்றம் தீர்ப்பு

சென்னை, மார்ச் 2- கல்லூரி வாயிலில் மாணவியை குத்திக்  கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து சென்னை மகளிர் சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. சென்னை மதுரவாயலை சேர்ந்த அஸ்வினி என்பவர் கே.கே.நகரில் மீனாட்சி கல்லூரியில் பட்டப்படிப்பு முதலாம் ஆண்டு  படித்து வந்தார். அதே பகுதியைச் சேர்ந்த  அழகேசன் என்பவர் அஸ்வினி கல்லூரி செல்லும் போதெல்லாம் பின்தொடர்ந்து காதலிப்பதாக கூறி தொல்லை செய்துள் ளார். இதனால் கோபமடைந்த அஸ்வினி, அளித்த புகாரின் அடிப்படையில் காவல் துறையினர், அழகேசனை கைது செய்த னர்.  ஜாமினில் வெளியே வந்த அழகேசன் கடந்த 2018ஆம் ஆண்டு மார்ச் மாதம் கல்லூரி  வாசலில் வைத்து அஸ்வினியை கத்தியால்  குத்தினார். அங்கிருந்தவர்கள் அஸ்வினியை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக அஸ்வினி உயிரிழந்தார். இதற்கிடையே அஸ்வினியை கத்தியால் குத்திய அழகேசனை பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர்.  இதுகுறித்து கே.கே.நகர் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசா ரணை நடத்தினர். இந்த வழக்கை சென்னை அல்லிக்குளத்தில் உள்ள மகளிர் சிறப்பு நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்நிலை யில் அழகேசன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள் ளதாக கூறி அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிபதி டி.எச்.முகமது பாரூக் தீர்ப்பளித்தார். மேலும், 10,500 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் பாதிக்கப்பட்டோர் இழப்பீட்டு நிதியத்தில் இருந்து அஸ்வினியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என சென்னை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக் குழுவுக்கு நீதிபதி பரிந்துரைத்துள்ளார்.

சென்னையில் 5 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை 

சென்னை, மார்ச் 2- சென்னையில் 5க்கும் மேற்பட்ட இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை (மார்ச்.2) சோதனை நடத்தி  வருகின்றனர். கட்டுமானம் மற்றும் ரசாயன நிறுவன அதிபர்களின் வீடுகள், அலுவலகங்களில் அமலாக்கத் துறை யினர் சோதனை நடைபெற்றது. சென்னை கோட்டூர்புரத்தில்  விஷ்ணு என்பவரின் வீட்டிலும், அண்ணா நகரில் சுப்பிர மணியம் என்பவரின் வீட்டிலும் சோதனை நடைபெற்றது. இதேபோல், தி.நகரில் உள்ள தனியார் கட்டுமான நிறுவனத்தி லும் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தி னர்.

ஆர்.கே.சுவாமி நிறுவன பங்கு விற்பனை நாளை தொடங்குகிறது 

சென்னை, மார்ச் 2- ஒருங்கிணைந்த சந்தைப்படுத்தல் சேவை, விளம்பர தயாரிப்பு, தெலைக்காட்சி நிகழ்ச்சிகள், ஆவணப்பட தயாரிப்பு  நிறுவனமான ஆர்.கே.சுவாமி லிமிடெட்  நிறுவனம்  திங்களன்று ( மார்ச் 4) பொதுப்பங்கு விற்பனையை துவங்க  உள்ளது.  ஆரம்ப பங்கு விற்பனை மார்ச் 6 ஆம் தேதி முடிவடையும்.  பொதுபங்கு வெளியீட்டிற்கு முன்னதாக பங்குகளை வாங்கும்  ஆங்கர் முதலீட்டாளர்களிடமிருந்து இந்நிறுவனம்  ரூ.187 கோடிக்கும் மேல் திரட்டியுள்ளது. இந்நிறுவனம் 6,500,937 பங்குகளை 18 முதலீட்டாளர்களுக்கு தலா ரூ.288  என்ற விலையில் ஒதுக்கீடு செய்துள்ளது .   ஆர்.கே.சுவாமி நிறுவனம் இந்த பங்கு வெளியீட்டில் இருந்து ரூ.423 கோடியை திரட்ட திட்டமிட்டுள்ளது என்று அதன் தலைமை மேலாண் இயக்குநரான சீனிவாசன் கே. சுவாமி கூறினார்.

சென்னை கடற்கரை - தாம்பரம்:  கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கம்

சென்னை, மார்ச் 2- கோடம்பாக்கம் - தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே ஞாயிறன்று (மார்ச் 3) நடைபெறவுள்ள பராமரிப்பு  பணி காரணமாக 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில், அந்த வழித்தடத்தில் வழக்கமாக இயக்கப்படும்  பேருந்துகளுடன் 150 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படும் என சென்னை மாநகர போக்குவரத்து கழகம்  அறிவித்துள்ளது. சென்னை பிராட்வேயில் இருந்து அண்ணா சாலை வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18ஏ பேருந்தின் எண்ணிக்கை 60, சென்னை பிராட்வேயில் இருந்து தி.நகர்,  எழும்பூர் வழியாக தாம்பரத்திற்கு செல்லும் 18ஜி பேருந்தின் எண்ணிக்கை 20, கிண்டியில் இருந்து கிளாம் பாக்கத்திற்கு செல்லும் 18ஏசிடி பேருந்தின் எண்ணிக்கை 10, கொருக்குப்பேட்டையில் இருந்து தாம்பரத்திற்கு செல்லும் பி18 பேருந்தின் எண்ணிக்கை 30, சென்னை பிராட்வேயில் இருந்து கூடுவாஞ்சேரி செல்லும் இ18  பேருந்தின் எண்ணிக்கை 20, தி.நகரில் இருந்து கூடுவாஞ்சேரி  செல்லும் ஜி18 பேருந்தின் எண்ணிக்கை 10 என மொத்தம் 150 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

மாமல்லபுரத்தில் கடல் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட மாணவர் பலி 

மாமல்லபுரம்,  மார்ச் 2- மாமல்லபுரம் கடலில் குளித்துக் கொண்டிருந்த கல்லூரி மாணவர்கள் அலையில் இழுத்து செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். நான்கு பேரை தேடி வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரத்திற்கு ஆந்திர மாநிலத்தில் இருந்து சுற்றுலா வந்த ஆந்திரா அரசு கல்லூரி மாணவர்கள் 30 பேர் கடலில் குளித்துக் கொண்டிருந்த போது எதிர் பாராத விதமாக பத்து பேர்  அலையில் இழுத்துச் செல்லப்பட்டனர். இந்த  தகவல் அறிந்து வந்த  மாமல்லபுரம் காவல்நிலை யத்தினர்,  மீனவர்கள் மற்றும்  கடலோர காவல் படை உதவி யுடன் ஆறு பேரை பத்திர மாக மீட்டனர். அதில்கெடு வாய்ப்பாக விஜய் (வயது18) என்ற இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவன் உயிரிழந்தார். மாயமான நான்கு மாணவர்களை தேடும் பணியில் மீனவர் கள், கடலோர காவல் படை யினர் மற்றும் தீயணைப்பு துறையினர் ஈடுபட்டு வரு கின்றனர். மணாவர்கள் கடல்  அலையில் சிக்கிய  சம்பவம்  அப்பகுதியில் பெரும்  பரபரப்பை ஏற்படுத்தி யுள்ளது.

விழுப்புரத்தில் பெண்ணிடம்  சங்கிலி  பறிப்பு

விழுப்புரம், மார்ச்.2- விழுப்புரம் அருகே கட்டபொம்மன் நகரில் நடந்து சென்ற பெண்ணிடம் நகையை பறித்துச் சென்ற ரெண்டு வாலிபர்களை போலீசார் தேடி வருகின்றனர். விழுப்புரம் கட்டபொம்மன் பகுதியைச் சேர்ந்தவர் அன்பழகன் இவரது மனைவி கலைமதி வயது 58 இவர் வெள்ளிக்கிழமை இரவு சுமார் 8.45 மணி அளவில் தனது பேத்தியுடன் அதே பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்கு சென்று விட்டு மீண்டும் தனது வீட்டிற்கு நடந்து வந்து கொண்டிருந்தார், அப்போது அங்கு மோட்டார் சைக்கிளில் தலைக்கவசம் அணிந்து வந்த சுமார் 25 வயது மதிக்கத்தக்க இரண்டு வாலிபர்கள் நடந்து வந்த கலைமதியிடம் ஏதோ முகவரி கேட்பது போல் கேட்டனர், அதற்கு நின்று பதில் சொன்ன கலைமதியின் கழுத்தில் திடீரென அந்த நபர்கள் கத்தியை வைத்து மிரட்டி அவர் அணிந்திருந்த ஆறரை பவுன் தங்க சங்கிலியை பறித்தனர், அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் விரைந்து வருவதற்குள் அவர்கள் இருவரும் தங்கச் சங்கிலியை பறித்துக் கொண்டு தப்பிச் சென்று விட்டனர்.

மது பாட்டில்கள் கடத்திய 3 பேர் கைது

கடலூர், மார்ச்.2- கடலூர் மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஸ்ரீபிரியா தலைமையிலான போலீசார் கடலூர் ஆல்பேட்டை சோதனை சாவடியில் சனிக்கிழமை அதிகாலை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.  அப்போது அந்த வழியாக வேகமாக வந்த மோட்டார் சைக்கிளை வழிமறித்தனர். பின்னர் அதில் இருந்த சாக்கு மூட்டையை சோதனை செய்தபோது, அதில் சாராய பாக்கெட்டுகள் மற்றும் ஏராளமான மது பாட்டில்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து மோட்டார் சைக்கிளில் வந்தவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் புதுச்சேரி மாநிலம் பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த சூர்யா (வயது 30) என்பதும், ஆலப்பாக்கம் அருகே கீழ்பூவாணிக் குப்பத்தை சேர்ந்த ராதாகிருஷ்ணன் மனைவி ஜெயப்பிரதா (வயது 55) என்பவருக்கு விற்பனை செய்வதற்காக கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து சூர்யா, ஜெயப்பிரதா ஆகியோரை கைது செய்தனர்.  மேலும் அவரிடம் இருந்து ரூ.12 ஆயிரம் மதிப்புள்ள 350 மது பாட்டில்கள் மற்றும் சாராய பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். இதேபோல் போலீசார் அழகிய நத்தம் சோதனை சாவடியில் வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த மோட்டார் சைக்கிளை மறித்து சோதனை செய்ததில் அதில் மது பாட்டில்கள் மற்றும் சாராயம் கடத்தி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மதுபாட்டில்களை கடத்தி வந்த கீழ்பரிக்கல்பட்டை சேர்ந்த சுரேஷ்குமார் என்பவரை கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 600 மது பாட்டில்கள் மற்றும் 50 பாக்கெட் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது.

குப்பநத்தம் அணையிலிருந்து தண்ணீர் திறப்பு

திருவண்ணாமலை,மார்ச்.2- திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அடுத்த ஜவ்வாதுமலை அடிவாரத்தில் உள்ள  குப்பநத்தம் அணையிலிருந்து விவசாய பாசனத்திற்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தண்ணீரை திறந்து வைத்தார். இந்த நிகழ்வில், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் சி.என்.அண்ணாதுரை, செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அணையின் முழு கொள்ளளவு 59 அடி உயரமாகும்,  அணையில் தற்போது 435 மி.கன அடி தண்ணீர்   நிரம்பி உள்ள நிலையில்,    ஏரிகளில் குறைந்துள்ள தண்ணீரின் கொள்ளளவை நிரப்பும் பொருட்டு  தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. 02-03-23 முதல் 27-03-23 வரையிலான 25 நாட்களுக்கு நாள் ஒன்றுக்கு 152 கன அடி வீதம் 328 மில்லியன் கன அடி தண்ணீர் திறப்பதாகவும் இதன் மூலம் 9432.76 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் எனவும் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.