சென்னை, செப். 30 - தோழர் பி.சீனிவாசராவ் நினைவு தின மான சனிக்கிழமையன்று (செப்.30) மத்திய சென்னை மாவட்டத்தில் 100 மையங்களில் உறுதியேற்பு நிகழ்ச்சி நடை பெற்றது. விடுதலைப் போராட்ட வீரராகவும், கம்யூனிச இயக்கத்தின் தொடக்க கால தலைவராகவும் திகழ்ந்த தோழர் பி.சீனிவாசராவ், தஞ்சை மாவட்டம் முழுவதும் விவசாயிகளையும், விவசாயத் தொழிலாளர்களையும் தட்டி எழுப்பினார். நிலப்பிரபுக்கள், பண்ணையார்களின் சாதிய ஒடுக்குமுறையிலிருந்தும், பொரு ளாதார சுரண்டலில் இருந்தும் விடுதலை பெற விவசாயிகளை எழுச்சியுற செய்தார். வர்க்கப் போராட்டத்தையும், சாதி ஒழிப்பு போராட்டத்தை ஒருசேர நடத்திய அவரின் நினைவு தினத்தில் சமூக சமத்து வத்திற்கான உறுதிமொழியேற்பு நிகழ்ச்சி மாவட்டம் முழுவதும் நடைபெற்றது. ஆங்காங்கே அவரின் உருவப்படத்திற்கு அஞ்சலி செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். இதன் ஒருபகுதியாக சீனிவாசராவின் இல்லத்திற்கு சென்று கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர்கள் ஆர்.முரளி, எஸ்.கே.முருகேஷ், இ.சர்வேசன் ஆகியோர் அஞ்சலி செலுத்தினர். மேலும், பி.சீனி வாசராவ் உருவப்படத்தை அவரது மகன் ராஜசேகர், மருமகள் பொன்னி ஆகி யோரிடம் வழங்கினர்.