districts

img

திமுக தலைமையிலான அணிக்கே வாக்களிப்போம்

விழுப்புரம், ஏப்.3- தலித் கிறிஸ்தவர் விடுதலை இயக்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் செவ்வாயன்று (ஏப்.2) விழுப்புரத்தில் மாநில தலைவர் பேரா. டாக்டர் மேரி ஜான் தலைமையில் நடைபெற்றது. மக்களவை தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணிக்கு ஆதரவு அளிப்பதென இந்த கூட்டத் தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. தலித் கிறிஸ்தவர் களுக்கு ஒன்றிய அரசு பட்டியல் இனத்தவர் (எஸ்சி)  உரிமையை இன்னும் வழங்கப்படாத நிலையில்  தமிழ்நாட்டில் பிற்படுத்த பட்ட வகுப்பினருக்கான (பிசி) இடஒதுக்கீட்டில் தலித்  கிறிஸ்தவர்களுக்கு மக்கள் தொகை அடிப்படையில் 4.6 விழுக்காடு உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும், மதச்சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பும், சமூக நீதியும், அரசியல் சாசன உரிமையும், பெற்றிட இந்த மதச்சார்பற்ற  முற்போக்கு கூட்டணி கட்சி கள் செயலாற்ற வேண்டும், திமுக தலைமையிலான இந்த மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை சேர்ந்த காங்கிரஸ், சிபிஎம், சிபிஐ,விசிக, மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள்  தேசிய கட்சி, இந்திய ஜன நாயக கட்சி ஆகியவை களின் வேட்பாளர்களுக்கே வாக்களிக்க வேண்டு மென தலித் கிறிஸ்தவ மக்களுக்கும், அனைத்து  சிறுபான்மை சமுதாய மக்களுக்கும் வேண்டு கோள் விடுத்து, அவர்களின்  வாக்குகளை திரட்டவும் இயக்கம் தேர்தல் களப் பணி ஆற்றும் என்பதையும் தெரிவித்து கொண்டனர். கூட்டத்தில் பொதுச் செயலாளர் டி. தானியேல்,  பொருளாளர் பி.சந்தன துரை, உயர்மட்ட ஆலோ சனை குழு தலைவர் எம்.சலேத்தையன், இணை பொதுச்செயலாளர்கள் எம்.அமலோபவதாஸ், பேரா. ஆனந்தராஜ், கொள் கைபரப்பு செயலாளர் எம்.பெர்னாண்டஸ், மகளி ரணி செயலாளர் ஏ. ஆலிஸ் மற்றும் இயக்கத்தின் மறை மாவட்ட நிர்வாகிகள் திரளாக கலந்துகொண்டனர்.