மரங்களை பாதுகாப்போம்: ஆரோவில்லில் பேரணி
புதுச்சேரி,மே 7- விழுப்புரம் மாவட்டம், வானூர் அருகே அமைந்துள்ளது சர்வதேச நகரமான ஆரோவில். இங்கு நாடு, மதம், இனம், மொழி, அரசியல் என வேறுபாடின்றி 3 ஆயி ரத்திற்கும் அதிகமான வெளி நாட்டினர் வசித்து வரு கின்றனர். இங்குள்ள பூமி வடிவிலான மாத்திர் மந்திரியை சுற்றி, அன்னை யின் கனவு திட்டமான கிர வுன் சாலை அமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு இடை யூறாக இருந்த மரங்கள் வெட்டப்பட்டு வருகிறது. பசுமை நிறைந்த இயற்கை வளங்களை அழிப்பதற்கு ஒரு தரப்பினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரு கின்றனர்.. ஆரோவில் நிர்வாகத்தை கண்டித்து பேரணி நடத்தினர்.
வெறிநாய்கடி தடுப்பூசி
கள்ளக்குறிச்சி.மே 7- கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே உள்ள கோளப்பாறை கிராமத்தில் தெருவில் சுற்றித் திரிந்த சில நாய்கள் திடீரென பொதுமக்களை கடித்துக் குதற ஆரம்பித்தது. சுமார் 10-க்கும் மேற்பட்ட பொதுமக்களை நாய் கடித்ததால் அருகில் உள்ள அரசு மருத்து வமனையில் சிகிச்சை பெற்றனர். அதனைத் தொடர்ந்து திருக்கோவிலூர் கோட்ட கால்நடை பராமரிப்பு துறை அதிகாரிகள் உடனடியாக கோளப்பாறை கிராமத்திற்கு சென்று தெருவில் திரியும் நாய்களுக்கும் வீடுகளில் வளர்க்கப்படும் செல்லப் பிராணிகளுக்கும் தடுப்பூசி செலுத்தினர்.
போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள்
வேலூர். மே 7 - வேலூர் மாவட்டத்தில் தமிழ்நாடு அரசின் 'நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தற்போது மத்திய அரசு பணியாளர் தேர்வாணையத்தால் வெளியிடப்பட்டுள்ள போட்டித் தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. இப்பணிக்காலியிடங்க ளுக்கு கல்வித்தகுதி பட்டப்படிப்பு தேர்ச்சி ஆகும். வயதுவரம்பு 1.8.2023 தேதியில் 18 முதல் 27 ஆகும். வயது வரம்பில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்கு (எஸ்சி/எஸ்டி) 5 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வும் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கு (ஓபிசி) 3 வருடங்கள் தளர்வும், மற்றும் 10 வருடங்கள் வயதுவரம்பில் தளர்வும் உண்டு. போட்டித் தேர்வுகளுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் தங்களது புகைப்படம், SSC(CGL) போட்டித் தேர்வுக்கு விண்ணப்பித் தமைக்கான சான்று மற்றும் ஆதார்எண் ஆகிய விவரங்களுடன் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தை நேரிலோ அல்லது தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டும் 0416-2290042 மற்றும் கைப்பேசி எண் 9499055896-ல் தொடர்பு கொள்ளவேண்டும்.
லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி 3பேர் கைது
திருவள்ளூர்,மே 6- திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆனந்தன்.லாரி ஓட்டுநர். இவர் சனிக்கிழமை இரவு பனப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்தில் இருந்து 23 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு தனியார் அரிசி ஆலைக்கு சென்றார். சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் ஆனந்தனை தாக்கி கத்தி முனையில் மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்துச் சென்றனர். போலீசார் விசாரணை நடத்தி வழிப்பறியில் ஈடுபட்ட 3 பேரை கைது செய்தனர்.
அங்கன்வாடி ஊழியர்களுக்கு கோடை விடுமுறை:
முதலமைச்சருக்கு ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நன்றி
சென்னை,மே 7- அங்கன்வாடி ஊழியர்களுக்கு மே மாதம் கோடைவிடுமுறை அளித்த முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, தமிழ்நாடு அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் நன்றி தெரி வித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் தலைவர் எப்.ரத்தினமாலா, பொதுச்செயலாளர் டி.டெய்சி ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு, 32 வருட காலமாக தொடர்ந்து கோரிக்கைகளை வைத்து போராட்டம் நடத்தினோம். ஆனால் நிறைவேற்றப்படவில்லை, நாங்கள் காத்திருப்பு போராட்டம் தொடங்கிய 12 மணி நேரத்தில் பெண்கள் போராடக்கூடாது என்று சொல்லி உடனே அழைத்து பேசி கோரிக்கையை நிறைவேற்றுங்கள் என ஆணையிட்ட முதல்வருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம், இந்த அரசு சமூகநீதி அரசு என்பதை யும், பெண்களுக்கான அரசு என்பதை யும் நிரூபித்துள்ளது.
எங்களின் கோரிக்கையை முதல்வர் கவனத்திற்கு கொண்டு சென்று கோடை விடுமுறை இந்தாண்டு வழங்கப்படும் என்று உறுதியளித்து 15 நாட்கள் ஊழியர்களுக்கும் உதவியாளர்களுக்கும் வழங்கிய சமூகநலம் மற்றும் பெண்கள் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவனுக்கு சங்கத்தின் சார்பில் நன்றி தெரிவித்து கொள்கிறோம். அமைச்சர் சொன்னவுடன் உடனடி யாக அதற்கான பணிகளில் ஈடுபட்டு ஒன்றிய அரசின் அனுமதியை பெற்று பல்வேறு மாநிலங்களில் உள்ள அரசாணைகளை எல்லாம் பார்வை யிட்டு உடனடியாக ஊழியர்கள் மற்றும் உதவியாளர் இருவருக்கும் விடு முறை என அரசாணை வெளியிட்ட சமூகநலத்துறை முதன்மை செயலர் மற்றும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்ட குழும இயக்குநர் மற்றும் உதவி இயக்குநர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம் இந்த கோரிக்கை நிறைவேறவும் எங்களது கோரிக்கைகளை எப்போதும் அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும் சிபிஎம் சட்டமன்ற உறுப்பினர்கள் சின்னதுரை, நாகை மாலி ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கிறோம். மேலும் எங்களின் நீண்ட நாள் கோரிக்கையான திமுக தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்ட வாக்குறுதி யையும், முதல்வர் , அமைச்சர் ஆகி யோர் நிறைவேற்றி தருவார்கள் என 50 ஆயிரம் ஊழியர்கள் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கிறோம். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பவும் அமைச்சர் ஆவன செய்ய வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
கிருஷ்ணா கால்வாயில் மாணவர் பலி
பெரியபாளையம்,மே 7- வெங்கல் அருகே உள்ள பட்டாபிராம் அடுத்த தண்டுரை பகுதியை சேர்ந்த வர் இமானுவேல் (வயது18). இவர் பூந்தமல்லி யில் உள்ள தனியார் கல்லூரியில் பி.டெக் படித்து வருகிறார். தற்போது பூண்டி ஏரியில் இருந்து புழல் ஏரிக்கு கிருஷ்ணா கால்வாயில் அதிகஅளவு தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் சனிக்கிழமையன்று மாலை இமானுவேல், தனது நண்பர் களுடன் புழல் ஏரிக்கு செல்லும் கிருஷ்ணா கால்வாயில் குளித்தார். அப்போது தண்ணீரின் வேகத்தில் அவர் இழுத்து செல்லப்பட்டார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடிய வில்லை. இதுகுறித்து வெங்கல் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. திருவூர் பகுதியில் இருந்து வந்த மீட்பு படை வீரர்கள் கிருஷ்ணா கால்வாயில் மூழ்கிய மாணவர் இமானு வேலை சடலமாக மீட்டனர்.
கஞ்சா விற்ற வாலிபர் கைது
போரூர்,மே 7- விருகம்பாக்கம் பகுதி யில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வாலிபரை போலீ சார் வாடிக்கையாளர் போல் பேசி வரவழைத்து மடக்கி பிடித்தனர். விசாரணையில் அவர் திரிபுரா மாநிலத்தை சேர்ந்த பிஸ்வாஜித் (24) என்பதும், வடபழனி நூறடி சாலையில் உள்ள ஓட்டல் ஒன்றில் தங்கி தொழிலாளியாக வேலை பார்த்தபடி கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து பிஸ்வாஜித்தை போலீசார் கைது செய்து 8 கிலோ கஞ்சா, செல்போனை பறி முதல் செய்தனர்.
கூடுதலாக வாகனம் நிறுத்துமிடம் அமைக்க மாநகராட்சி ஆய்வு
சென்னை,மே 7- சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில் சாலையோர போக்குவரத்து மேம்பாட்டு திட்டத்தின் கீழ் வாகனங்களை நிறுத்துவதற்கான பார்க்கிங் இடங்கள் அமைக்கப்பட்டு ள்ளன. தி.நகர், திருவல்லிக்கேணி, அடை யாறு, அம்பத்தூர், அண்ணாநகர், அசோக்நகர், பெசன்ட்நகர், புரசைவாக்கம் உள்ளிட்ட 80-க்கும் மேற்பட்ட இடங்க ளில் இவை கண்டறியப்பட்டு செயல்படுத்தப்பட்டுள்ளது. பார்க்கிங் கட்டணம் மூலம் தினமும் ரூ.1.5 லட்சம் வரை வாடகை கட்டணம் மாநகராட்சிக்கு கிடைத்து வருகிறது. இந்த நிலையில் பயன்பாட்டில் இல்லாத கட்டிடம் மற்றும் மேம்படுத்த வேண்டிய வணிக வளாகம் என கூடுதலாக 10 இடங்களில் வாக னங்களை நிறுத்தும் வசதிகள் குறித்து மாநகராட்சி ஆய்வு செய்து வருகிறது.
ஏரிகள் தூர்வாரி புனரமைப்புப்பணி துவக்கம்
திருவள்ளூர்,மே 7- திருவள்ளூர் மாவட்டத்தில் நீர் நிலைகளை தூர்வாரி கூடுதல் தண்ணீரை சேமித்து வைக்க மாவட்ட நிர்வாகம் தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. தற்போது கோடைக்காலம் தொடங்கி வெயில் வாட்டி வரும் நிலையில் ஏரி, குளங்களில் நீர் இருப்பு குறைந்து வருகிறது. இந்தநிலையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள மேல்நல்லாத்தூர் ஏரி, நுங்கம்பாக்கம் ஏரி உள்ளிட்ட ஏரிகளை தூர்வாரி, புனரமைப்பு செய்யும் பணியை தொடங்க தனியார் தொண்டு நிறுவனம் முன்வந்துள்ளது. ஏரிகளை தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான்வர்க்கீஸ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேல்நல்லாத்தூர், நுங்கம்பாக்கம் ஏரி களை தூர்வாரி புனரமைப்பதன் மூலம் கூடுதல் தண்ணீரை சேமிக்க முடியும் என்று அதிகாரிகள் தெரி வித்து உள்ளனர்.
காசிமேட்டில் மீன் விலை கடும் உயர்வு
சென்னை,மே 7- தமிழகத்தில் மீன்பிடி தடை காலம் கடந்த மாதம் 15ந்தேதி தொடங்கியது. தொடர்ந்து 61 நாட்கள் இந்த மீன்பிடி தடைகாலம் நீடிக்கிறது. இதைத்தொடர்ந்து காசி மேடு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆழ்கடலில் மீன் பிடிக்கும் விசைப்படகுகள் கடலுக்குள் செல்லவில்லை. சிறியவகை பைபர் படகுகளில் மீனவர்கள் மீன் பிடித்து வருகிறார்கள். இதனால் குறைந்த அளவு மீன்கள் விற்பனைக்கு வருவதால் அதன் விலை அதிகரித்து உள்ளது. ஞாயிறன்று காசிமேடு மார்க்கெட்டில் மீன் வாங்க ஏராளமானோர் குவிந்தனர். குறைந்த அளவு மீன்கள் மட்டுமே விற்பனைக்கு வந்ததால் விலை கடுமையாக உயர்ந்து இருந்தது. வஞ்சிரம் கிலோ ரூ.2 ஆயிரம் வரை விற்கப்பட்டது. கொடுவா, பாறை உள்ளிட்ட மீன்கள் அதிக அளவு விற்பனைக்கு வந்தி ருந்தன. சாதாரண நாட்களில் ரூ.400 முதல் 600 வரை விற்பனை செய்யப்படும் மீன்கள் தற்போது ரூ.1000 வரை விற்பனை செய்யப்பட்டன.
லாரி ஓட்டுநரிடம் வழிப்பறி
திருவள்ளூர்,மே 7- திருவள்ளூர் பத்தியால்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் லாரி ஓட்டுநர் ஆனந்தன் ஞாயின்று இரவு பனப்பாக்கம் அரசு நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து 23 டன் நெல் மூட்டைகளை ஏற்றிக் கொண்டு திருவள்ளூர் தனியார் அரிசி ஆலைக்கு லாரியை ஓட்டி சென்றார். அரிசி ஆலை அருகில் உள்ள சுடுகாடு அருகே சென்று கொண்டிருந்த போது அங்குவந்த மர்ம கும்பல் லாரியை வழி மறித்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் டிரைவர் ஆனந்தனை தாக்கி கத்தி முனையில் மிரட்டி ரூ.5 ஆயிரத்தை பறித்து தப்பி சென்றுவிட்டனர். இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து இளவரசன் உள்பட 3 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும்
வணிகர் தின மாநாட்டில் த.வெள்ளையன் பேச்சு
அச்சரப்பாக்கம்,மே 7- தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பில் வணிகர் தினத்தையொட்டி வெள்ளி யன்று செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப் பாக்கத்தில் சில்லறை வணிகர் உரிமை மீட்பு மாநாடு நடைபெற்றது. மாநாட்டுக்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். இதில் துணை தலைவர் கருங்கல் ஜார்ஜ் உள்பட சங்க நிர்வாகிகள், வியாபாரி கள் கலந்து கொண்டனர். பின்னர் செய்தி யாளர்களிடம் த.வெள்ளையன் கூறிய தாவது:- அந்நிய தயாரிப்புகள் அதிகமாக விற்பனைக்கு வந்துவிட்டது. இதனால் நமது வணிகத்துக்கு ஆபத்து நெருங்கி கொண்டு உள்ளது. நம் நாட்டு தயாரிப்பு கள் காப்பாற்றப்பட வேண்டும். அந்நிய தயாரிப்புகளை விரட்டி அடிக்க வேண்டும். ஆன்லைன் வர்த்தகத்தை ஒழிக்க வேண்டும். இதற்கு வணிகர் சங்க பேரவை தொடர்ந்து போராடும். எந்த காலத்திலும் இல்லாத வகையில் தற்போது அரிசிக்கும் ஜி.எஸ்.டி. வரி போடப்பட்டுள்ளது. ஜி.எஸ்.டி. வரி ஒழியும் வரை நாம் போராட வேண்டும். எதற்காக வும் சிறைக்கு செல்லவும் தயாராக வேண்டும் என்றார். இதனால் பொதுமக்கள் தங்கள் வாங்கும் பொருட்களுக்கு நேரடியாக பணம் வழங்காமல் ஸ்மார்ட் போன் மூல மாக 'கியூ ஆர் கோடு' பயன்படுத்தி பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். இந்த நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மண்டல கூட்டுறவுச்சங்கங்களின் இணைப்பதிவாளர் ஜெயஸ்ரீ, காஞ்சிபுரம் மத்திய கூட்டுறவு வங்கியின் பதிவாளர், மேலாண்மை இயக்குநர் முருகன் உள்ளிட்ட பலர் பலர் கலந்து கொண்டனர்.