காஞ்சிபுரம், ஏப்.1- இந்திய தேசத்தை ஒரே நாடு என்ற முழக்கத்தால் கலவர பூமி யாக மாற்ற முயற்சிக்கும் மோடியை மக்களவைத் தேர்தலில் வீழ்த்து வோம் என்று மக்களுக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் அ.சவுந்தரராசன் அழைப்பு விடுத்தார். காஞ்சிபுரம் (தனி) மக்களவைத் தொகுதி திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வத்தை ஆதரித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி காஞ்சிபுரம் மாவட்டக்குழு சார்பில் காஞ்சிபுரம் பெரியார் தூண் அருகே மாவட்டச் செயலாளர் சி.சங்கர் தலைமையில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பேசுகையில், ஏழை-எளிய மக்கள் வாட்டி வதைக்கும் மோடி அரசு சிறு குறு உற்பத்தியாளர்களை அழித்து ஒழித்துவிட்டது. அதானி,அம்பானி உள்ளிட்ட பெரும் பணக்காரர்கள் மட்டும் தான் நாட்டில் வாழ முடியும் என்ற நிலையை ஏற்படுத்திவிட்டது. ஆகவே சாமான்ய மக்களுக்கு எதிரான இந்த ஆட்சி தொடர்ந்து நீடிக்கக்கூடாது. இந்திய நாட்டில் பாரத அன்னையின் முன்பும், அரசி யல் சட்டத்தின் முன்பும் அனைவரும் சமம், இந்திய மக்கள் அனைவரும் சமமாக இருப்பதை மோடி அரசு விரும்பவில்லை. பாகிஸ்தான் தான் வழிகாட்டியா? பல்வேறு மாநில மக்கள் அமைதி யாக வாழும் இந்திய தேசத்தை ஒரே நாடு என்கிற பெயரால் கலவர பூமியாக மாற்ற வேண்டுமென மோடி நினைக்கிறார். இதைவிட தேச துரோதம் வேறென்ன இருக்கமுடியும். இந்த நாட்டை இந்து என்ற ஒற்றை மதத்திற்குள் அடக்கத் துடிக்கிறார். இந்து, முஸ்லிம், கிறிஸ்தவர் என இருப்பவர்கள் அவர்களாகவே இருக்கட்டும். இன்று இந்து நாடு என்று அறியப்பட வேண்டும் என்று நினைக்கிறார். இதைபற்றி கேட்டால் பாகிஸ்தானில் இஸ்லாம் தான் ஆட்சி செய்யும் போது இந்தியாவில் இந்து அரசு அமைய கூடாதா என்று எதிர்கேள்வி கேட்கிறார். அப்படி யென்றால் உங்களுக்கு பாகிஸ்தான் தான் வழிகாட்டியா? இந்தியாவிற்கு ஒரே கலாச்சாரம் என்பது எப்படி சாத்தியமாகும். நமக்கு வழிகாட்டி அரசியல் சட்டம், சுதந்திரப் போர் உருவாக்கிய விழு மியம், மதச்சார்பின்மை என்பதுதான் இந்நாட்டின் அடையாளம் நாம் அனை வரும் ஒன்று என்பது தான் நாட்டின் பலம். விண்ணைத்தொடும் விலையில் உள்ள எரிவாயு சிலிண்டர் தற்போது மக்களவைத்தேர்தல் என்பதால் ரூ.100 விலையை குறைத்து ஏமாற்று வேலையை செய்து வருகிறார் மோடி. இந்தியாவில் இளைஞர்களை பயன்படுத்துகிற ஆட்சி ஒன்றியத்தில் அமையுமேயானால் இந்தியா பொருளாதாரத்தில் சிறந்த நாடாக அமையும் என்றும் அவர் கூறினார். சமூக நீதி, மாநில உரிமை, கூட்டாட்சி தத்துவம், அரசியல் அமைப்பு சாசனம், ஜனநாயகம், மத நல்லிணக்கம் ஆகியவற்றை பாது காக்க திமுக வேட்பாளர் சிறுவேடல் க.செல்வத்துக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து பெரு வாரியான வாக்குகளில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் சவுந்தர ராசன் கேட்டுக் கொண்டார். இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.எம்.பி.எழிலரசன், மாநிலக்குழு உறுப்பினர்கள் ஐ.ஆறுமுக நயினார், இ.முத்துக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் கே.நேரு, பி.ரமேஷ், ஆர்.சௌந்தரி, திருப்பெரும்புதூர் வட்டச் செயலாளர் ப.வடிவேலன், காஞ்சிபுரம் வட்டச் செயலாளர் எஸ்.பழனி, எ.இளங்கோவன் (தொமுச), திமுக நகரச் செயலாளர்கள் தமிழ்செல்வன், குமார் பங்கேற்றனர். முன்னதாக காஞ்சிபுரம் நகரச் செயலாளர் டி.ஸ்ரீதர் வரவேற்றார். செயற்குழு உறுப்பினர் ஆர்.மதுசூதனன் நன்றி கூறினார்.