அண்ணாமலைப் பல்கலை கழக ஊரக வேளாண் பணி அனுபவம் பயிற்சி சார்பில் தொழு நோய் மற்றும் ரத்ததான விழிப்புணர்வு பிரச்சாரம் நடைபெற்றது. இதில் மிராளூர் ஆதிதிராவிடர் நல துவக்கப் பள்ளியில் மாணவர்கள் கலந்து கொண்டனர். பல்கலைக் கழக ஊரக பணி அனுபவ பொறுப்பாளர், செஞ்சிலுவை சங்க மண்டல ஒருங்கிணைப்பாளர் முனைவர் தி. ராஜ்பிரவின் தலைமை தாங்கினார். இந்த நிகழ்வில் தொழுநோய் தடுப்பு குறித்த உறுதி மொழியை ஆசிரியர் இந்திரா வாசித்தார். இதையொட்டி நடந்த வினாடி வினாவில் பங்கேற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டன. தலைமை ஆசிரியை இளவரசி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.