districts

img

காலாவதியான பரனூர் சுங்கச்சாவடியை மூடக்கோரி இடதுசாரி கட்சிகள் ஆர்ப்பாட்டம்

செங்கல்பட்டு, ஆக. 31- காலாவதியான பரனூர் சுங்கச் சாவடியை உடனடியாக மூட வலியுறுத்தி இடதுசாரி கட்சிகளின் கூட்டுக்குழு சார்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலை யில் செங்கல்பட்டு நகருக்கு அருகே உள்ள பரனூர் சுங்கச் சாவடி பலவகையில் சட்ட விரோதமாக தொடர்ந்து செயல்பட்டு வரு கிறது. தினசரி பல ஆயிரம் வாகனங்கள் கடந்து செல்லும் இந்த சுங்கச் சாவடியின் அனுமதி 2019ஆம் ஆண்டுடன் காலாவதி யாகி விட்டதாக கூறப்படுகிறது. தொழுப் பேடு சுங்கச் சாவடியில் இருந்து 60 கி.மீ. தூரத்திற்கு குறைவாகவே பரனூர் சுங்கச் சாவடி அமைந்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணை யம் விதிமுறைக்கு மாறாக செயல்படும் சுங்கச் சாவடிகளை நீக்கக் கோரி, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் நிறை வேற்றப்பட்டதில் பரனூர் சுங்கச் சாவடியும் ஒன்று. இவற்றுக்கெல்லாம் மேலாக. மத்திய தணிக்கை அறிக்கையில் (சிஏஜி 2023) பரனூர் சுங்கச் சாவடி சட்டத்தை மீறி கூடுதலாக ரூ.28 கோடி வசூலித் திருப்பதாக குறிப்பிட்டுள்ளது. பல்வேறு சட்ட விதி மீறல்களுடன் செயல்படும் பரனூர் சுங்கச் சாவடியால் தினசரி பல ஆயிரக் கணக்கான வாகன பயனாளிகள் மற்றும் உள்ளூர் வியா பாரிகள் உள்ளிட்ட அனைத்து தரப்பு மக்க ளும் பண இழப்புக்கு உள்ளாகும் நிலை தொடர்கிறது. இந்நிலையில் பரனூர் சுங்க சாவடியை அகற்றவும், சட்டவிரோத கொள்ளையை தடுத்து நிறுத்தவும் தமிழ்நாடு அரசும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி இடது சாரி கட்சிகளின் கூட்டுக்குழு சார்பில் வியா ழனன்று (ஆக. 31) ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் ப.சு.பாரதி அண்ணா தலைமை தாங்கினார். சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் ஆறுமுகநயினார், இந்திய கம்யூனி்ஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினர் மேகநாதன், மாவட்டச் செயலாளர் ராஜ்குமார், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) மாவட்டச் செயலாளர் ரணியப்பன், பாட்டாளி வர்க்க சமரன் அணி மாவட்டச் செய லாளர் கார்த்திகேயன், மணல் லாரி உரிமை யாளர்கள் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் கணேஷ் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். முன்னதாக கட்சி நிர்வாகிகள் செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர்.