districts

img

மறைந்த தோழர் குமார் குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாக்கும் படத்திறப்பு நிகழ்வில் தலைவர்கள் பேச்சு

திருவள்ளூர், ஜன 22- மறைந்த தோழர் குமாரின் குடும்பத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாதுகாக்கும் என படத்திறப்பு விழாவில் பேசிய தலைவர்கள் தெரி வித்தனர். திருவள்ளூர் மாவட்டம், கும்மிடிப்பூண்டி அருகி லுள்ள சின்ன வழுதலம் பேடு சிபிஎம் கிளைச் செய லாளராக இருந்த தோழர் இ.குமார் 22 ஆண்டுகளாக கட்சியின் வளர்ச்சிக்காக பணியாற்றி வந்தவர், சாலை  விபத்தில் ஜன 7 அன்று காலமானார். மறைந்த தோழர் குமாருக்கு மீனாட்சி என்ற மனைவி உள்ளார்.மூத்த மகள் பூஜா சென்னை எத்திராஜ் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார், இரண்டாவது மகள் ஹாமநிஜா கும்மிடிப் பூண்டியில், 12ஆம் வகுப்பு வகுப்பு படித்து வருகிறார்.  கடைசி மகன் ஜெய்சந் தோஷ் கும்மிடிப்பூண்டியில் 5 ஆம் வகுப்பு படித்து வருகிறார். இந்த சூழலில் தோழர் குமார் காலமான நிலையில், குடும்பத்திற்கு வேறு வருவாய் இல்லாததால், குமார் குடும்பத்தை பாது காக்கும் வகையிலும், குழந்தைகளின் எதிர்கா லத்தை கருத்தில் கொண்டு குழந்தைகளின் உயர் கல்விக்கான செலவை சிபிஎம் கும்மிடிப்பூண்டி நகர கிளையும் மற்றும்  துளசி நாராயணன் குடும்ப மும் இணைந்து ஏற்கும் என படத்திறப்பு நிகழ்ச்சியில் தெரிவித்தனர். இந்நிகழ்ச்சிக்கு கும்மிடிப்பூண்டி நகர கிளை  செயலாளர் வி.ஆர்.லட்சு மணன் தலைமை தாங்கி னார். இதில் கட்சியின் மாவட்டச் செயலாளர் எஸ்.கோபால், மாவட்ட செயற் குழு உறுப்பினர் பி.துளசி நாராயணன், வட்ட செயலாளர் இ.ராஜேந்தி ரன், மாவட்டக் குழு உறுப்பி னர்கள் ஜி.சூரியபிரகாஷ், இ.ஜெயவேலு, வட்டக் குழு உறுப்பினர்கள் லோக நாதன், கோபால கிருஷ்ணன், ஒன்றிய கவுன்சிலர் எம்.ரவிக்குமார், சீனு, சிவக்குமார், குப்பன் ஆகியோர் புகழஞ்சலி செலுத்தினர்.முன்னதாக மறைந்த குமாரின் உருவப் படத்தை கட்சியின் மூத்த தோழர் சி.ஆறுமுகம் திறந்து வைத்தார். இதில் குமாரின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.