districts

img

அரசியல் மாற்றங்களுக்கு கால்கோள் இடமாக தொழிற்சங்க அலுவலகங்கள் செயல்படும்

சென்னை, ஜன. 23 - அடிமைத்தனத்திற்கு முடிவு கட்டும் தொழிலாளர் படையை உருவாக்கும் இடமாகவும் தொழிற்சங்க அலுவலகங்கள் செயல்படும் என்று சிஐடியு  மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். அரசாங்க போக்கு வரத்து ஊழியர் சங்கத்தின் புதிய கட்டிடம் (தோழர் வி.பி.சிந்தன் இல்லம், சிங்கண்ண தெரு, சிந்தா தரிப்பேட்டை, சென்னை) திறப்பு விழா திங்களன்று (ஜன.22) நடைபெற்றது. இந்த கட்டிடத்தை திறந்து  வைத்து, சங்க முன்னோடி களை கவுரவித்து சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந் தரராசன் பேசுகையில், போக்குவரத்து ஊழியர் சங்க போராட்ட வரலாற்றை யும், அரசியல் போக்கு களையும், எதிர்கொண்ட சவால்களும் நினைவு கூர்ந்தார். பிரச்சனை வரும் போது படகு போல் தள்ளாடாமல், கற்பாறை போல் எதிர் கொள்ள வேண்டும் என்று முன்னோடிகளின் வழிகாட்டலை சுட்டிக் காட்டிய அவர், புதிதாக திறக்கப்பட்டுள்ள இந்த கட்டிடம் வலுவான தொழிற் சங்கத்தை உருவாக்குவ தோடு, பொருளாதார கோரிக்கைகளுக்கான போராட்டங்களை நடத்த வேண்டும். மேலும், அரசியல் ரீதியாக, அடிமைத் தனங்களுக்கு முடிவு கட்டுவதற்கான தொழிலாளர் படையை உருவாக்கும் இடமாகவும் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அநியாயத்தை எதிர்த்து போராடும் போது உடன் வருகிறவர்களை இணைந்து போராட வேண்டும். அதில் எந்த தவறும் இல்லை.

எந்த ஒரு சங்கத்தின் கீழ் தொழிலாளி இருந்தாலும், நம்முடைய வர்க்கம் என்ற உணர்வோடு அணி திரட்டுவோம்; போராடுவோம். நமது போராட்டங்களுக்கு தொழி லாளர்கள் அங்கீகாரம் தருகிறார்கள். நமது சங்க பணியோடு முறைசாரா தொழிலாளர்கள் அணி திரட்டுவோம். அமைப்பாய் திரட்டிட கருத்துப் போர் ஆற்றுவோம் என்றும் அ.சவுந்தரராசன் கூறினார். ஜி.சுகுமாறன் இந்த நிகழ்வில் பேசிய சிஐடியு மாநில பொதுச் செயலாளர் ஜி.சுகுமாறன், “நிதியமைச்சராக இருப்ப வர் கூட, கழிக்க, பெருக்க  எவ்வளவோ வேலைகள்  உள்ளன. வேலையின் மையை கழித்து, வேலை வாய்ப்பை பெருக்க  வேண்டும். விலைவாசி உயர்வை துடைத்தெறிய வேண்டும். ஆனால் ஒன்றிய நிதியமைச்சர் கோவில் கூட்டிக் கொண்டு  இருக்கிறார். ஒன்றிய ஆட்சி யாளர்கள் நடிப்பின் தில கங்களாக மாறியுள்ளனர். இத்தகைய போக்கிற்கு எதிராக, அரசியல் மாற்றத் திற்கு அடிக்கல் நாட்டும் இடங்களாக தொழிற்சங்க அலுவலகங்கள் செயல்பட வேண்டும்; செயல்படும்” என்றார். இந்நிகழ்விற்கு சங்கத் தின் பொதுச் செயலாளர் வி.தயானந்தம் தலைமை தாங்கினார். தலைவர் ஆர்.துரை வரவேற்றார். தோழர் கே.எம்.ஹரிபட் நினை வரங்கம் தமிழ்நாடு அரசு  போக்குவரத்து ஊழியர் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் திறந்து வைத்தார். கட்டிட கல்வெட்டை சம்மே ளனத்தின் துணை தலை வர் எம்.சந்திரன் திறந் தார். சிஐடியு மாவட்டச் செயலாளர்கள் பா.பால கிருஷ்ணன் (தென்  சென்னை), சி.திருவேட்டை (மத்திய சென்னை), சு.லெனின் சுந்தர் (வட சென்னை) உள்ளிட்டோர் பேசினர். சங்கத்தின் பொரு ளாளர் ஏ.ஆர்.பாலாஜி நன்றி கூறினார்.