சென்னை, நவ. 8 - மறைந்த தொழிற்சங்க தலைவர்கள் பி.டி.ரணதிவே, பி.ராமமூர்த்தி போன்றவர்களால் சிஐடியு தொடங்கப்படாமல் இருந்திருந்தால் இன்று வீரியமான தொழிற்சங்க இயக்கம் உருவாகியிருக்காது என்று சிஐடியு மாநில தலைவர் அ.சவுந்தரராசன் கூறினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவல கமான பி.ராமமூர்த்தி நினைவகத்தில், அவரது மார்பளவு உருவச்சிலை திறப்பு விழா மற்றும் புதுப்பிக்கப்பட்ட தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கம் திறப்பு விழா செவ்வாயன்று (நவ.7) நடைபெற்றது. இந்த நிகழ்வில் சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் பி.ஆர். சிலையை திறந்து வைத்து பேசுகையில், விடுதலைப் போராட்ட வீரர், காங்கிரஸ்காரர், பிற்போக்கு கருத்துக் களை எதிர்த்து முனைப்பான போராட்டங்களை முன்னெடுத்தவர், கம்யூனிஸ்ட் என பன்முக வரலாறு கொண்டவர் தோழர் பி.ஆர். அவரது போராட்ட பாரம்பரியத்தை சமரசமின்றி வலு வாக முன்னெடுத்து செல்கிறோம். தொழிற்சங்க இயக்கங்களில் இருந்த வர்க்க சமரசம், திருத்தல்வாதம் போன்றவற்றை எதிர்த்த போராட்டத்தின் முன்வரிசை போராளிகளாக பி.ஆர்., பி.டி.ஆர்., போன்றோர் இருந்தனர். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் புரட்சிகர தன்மை, வீரியத்தை, அது செய்ய வேண்டிய வரலாற்று கடமைகளை உணர்த்தி பாதுகாத்த னர். சிஐடியு உருவாகாமல் இருந்திருந்தால், இன்றைய தொழிற்சங்க இயக்கம் நிச்சயமாக வீரியத்தோடு புரட்சிகரமானதாக இருந்திருக்காது. பொருளாதார கோரிக்கைகளை கடந்து வரலாற்று கடமையாற்ற தொழிலாளி வர்க்கத்தை உந்தி தள்ள வேண்டும். மதவாதம், பிற்போக்குதனம், நவீன தாராளமயம், கார்ப் பரேட் ஆதரவு கொள்கைகளை எதிர்த்து போராட வேண்டும் என்ற பி.ராமமூர்த்தியின் எழுத்துக் களும், பேச்சுகளும் நம்மை வழி நடத்துகின்றன. தொழிலாளி வர்க்கத்தை, அதன் புரட்சிகர வர்க்க குணத்தோடு, திரட்டவும், வளர்த் தெடுக்கவும் பி.ஆர். வழியில் செய்வோம். கட்சி அமைப்பையும் வலுவாக கட்டமைப் போம்.
இளைஞர்களை திரட்டுவோம்
தோழர் எம்.ஆர்.வெங்கட்ராமன் அரங்கை திறந்து வைத்து மூத்த தலைவர் டி.கே.ரங்கராஜன் பேசுகையில், கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒவ்வொரு முறை படிக்கும் போதும் புதுபுது விளக்கத்தை தரும். அதை ஆழந்து கற்க வேண்டும். வலதுசாரி கருத்தி யல் ஆதிக்கம் செலுத்துகிறது. அது, நீதித்துறை, நிர்வாகத்துறையை அடிமைப் படுத்திக் கொள்ளும். அதை ஏற்காதவர்களை அழிக்கும். வலதுசாரி கருத்தியல் இயற்கை யாகவே சிறுபான்மையினர், மார்க்சியத்திற்கு விரோதமானது. ஏகாதிபத்தியம், நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்தும், நாட்டின் விடுதலைக்காகவும் எம்.ஆர்.வி., பி.ஆர். போன்றவர்கள் போராடி னர். வலதுசாரி பிற்போக்குவாத, சாதிய, மதவாத, பிராமனிய சித்தாந்தத்தை எதிர்த்து போராடும் களம் உருவாகி உள்ளது. 3 வயது குழந்தையை வைத்துக் கொண்டு தலைமறை வாக கட்சிப் பணியாற்றியவர் தோழர் எம்.ஆர்.வி. அத்தகைய தியாக பாரம்பரியம் மிக்க தீரர்கள் கம்யூனிஸ்ட்டுகள். ஆர்எஸ்எஸ்-சின் பல அமைப்புகளில் ஒன்று பாஜக. அரசியல் கட்சிகளை திவாலாக்க பாஜகவை அது பயன்படுத்துகிறது. ஏகாதிபத்தியத்தை புரிந்து கொண்டு தியாகம் செய்து போராடியது போல், ஆர்எஸ்எஸ்-சையும் எதிர் கொள்வோம். இளைஞர்களை அணி திரட்டுவோம். புரட்சி நடக்கும் மத்தியக்குழு உறுப்பினர் பி.சம்பத் பேசுகையில், உழைப்பாளி மக்களை சுரண்டும் தாராளமயக் கொள்கை, மக்களை அச்சுறுத்தும் இந்துத்துவா சக்திகளை முறியடிக்கும் தீரமிக்க சக்தியாக செங்கொடி இயக்கம் திகழ்ந்து கொண்டிருக்கிறது. இந்தியாவில் செங்கொடி இயக்கம் வளரும், முன்னேறும், மாற்றத்தை உருவாக்கும், புரட்சியை நடத்தும், மக்களின் வாழ்வில் மறுமலர்ச்சியை ஏற்படுத்தும் என்றார். முன்வரிசையில் கம்யூனிஸ்ட்டுகள் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி பேசுகையில், மக்கள் ஒற்றுமை, தேச ஒற்றுமை, ஜனநாயகம், மதச்சார்பின்மை, அறிவியல் கண்ணோட்டம் போன்ற விழுமியங்களை கம்யூனிஸ்ட்டுகள் முன்வரிசையில் நின்று பாது காப்போம். மக்களின் மனங்களை புரட்சிக்காக பண்படுத்தப்பட்டதாக மாற்றுவோம் என்றார்.