districts

img

மாணவரை கொடூரமாக கொன்றவர்களை கைது செய்ய காவல்துறைக்கு தயக்கம் ஏன்?

சென்னை, ஜன. 8 - காவல்துறை உயர் அதிகாரிகளை கொண்ட சிறப்புக்குழுவை அமைத்து போதை பொருட்களை விற்பனை செய்வோர், கடத்துவோர்  மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது. விருகம்பாக்கம்  எம்ஜிஆர் நகரில் போதை மாத்திரை விவகாரத்தில் 17 வயது மாணவர்  அஜெய்   கடந்த மாதம் 26ந் தேதி படுகொலை செய்யப்பட்டார். அவரின் கால்களை உடைத்து, கண்களை பிடுங்கி, கூர்மையான ஆயுதங்களால் உடலெங்கும் குத்தி கொலை செய்துள்ள னர். இந்த  சம்பவம் தொடர்பாக  காவல் துறை யினர் சிலரை கைது செய்தனர். ஆனால் முக்கிய குற்றவாளிகளை கைது செய்யவில்லை என கூறப்படுகிறது.  கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்ய வலியுறுத்தி அரசியல் கட்சிகள், சங்கங்கள் சார்பில் திங்களன்று (ஜன.8) எம்ஜிஆர் நகர் மார்க்கெட்டில் பொதுக்கூட்டம் நடைபெற இருந்தது. காவல்துறை அனுமதி மறுத்ததால் ஆர்ப்பாட்டமாக மாறியது. ‘தமிழகத்தில் நிலவும் போதை கலாச்சாரத்திற்கு முடிவு கட்ட வேண்டும், மாணவன் அஜய் கொலைக்கு காரணமாக குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும், மாணவனின் குடும்பத்திற்கு நிவாரணம் வழங்க வேண்டும்’ என்பன உள்ளிட்ட முழக்கங்களை எழுப்பினர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அனைத் திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் விருகம் பாக்கம் பகுதிச் செயலாளர் டி.விஜய குமாரி தலைமை தாங்கினார். இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தின் முன்னாள் மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், சிபிஎம் தென்சென்னை மாவட்டச் செய லாளர் ஆர்.வேல்முருகன், செயற்குழு உறுப்பினர் ச.லெனின், விருகம்பாக்கம் பகுதிச் செயலாளர் இ.ரவி, விசிக தென்சென்னை வடக்கு மாவட்டச் செய லாளர் செ.கரிகால்வளவன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் கரு.அண்ணாமலை, சிஐடியு மாவட்டச் செயலாளர் பா.பால கிருஷ்ணன், மாதர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.சரவணசெல்வி, இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் தீ.சந்துரு, பகுதி செயலாளர் கே.மணிமாறன், இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்டத் தலைவர் ச.ஆனந்த்குமார் உள்ளிட்டோர் பேசினர்.