சென்னை, ஜூலை 30- தோழர் வி.என்.ஆர். மொழியாற்றல் மிக்க வர் என தலைவர்கள் புகழாரம் சூட்டினர். தோழர் வி.என்.ராகவன் மறைவையட்டி அவருக்கு நினைவேந்தல் கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக் குழு சார்பில் சென்னை யில் வெள்ளியன்று (ஜூலை 30) நடை பெற்றது. நிகழ்ச்சிக்கு எஸ்.வி.வேணு கோபால் தலைமை தாங்கினார். மூத்த தலைவர் வி.மீனாட்சி சுந்தரம் பேசுகையில், தீக்கதிரில் நானும் அவரும் ஒன்றாக பணியாற்றினோம். தன்னுடைய வாதங்களை கூர்மையாக முன்வைப்பவர். பிடிஐ செய்திகளை நேர்த்தியாக சுருக்கிக் கொடுப்பார். மொழியாற்றல் மிக்கவர் என்று புகழாரம் சூட்டினார். மத்திய சென்னை மாவட்டச் செயலா ளர் ஜி.செல்வா பேசுகையில், ஒரு ஐயங்கார் குடும்பத்தில் பிறந்து, குடுமி வைத்துக் கொண்டு இருந்தவர், மார்க்சிய லட்சியத்தின் பால் ஈர்ப்பு ஏற்பட்டு, குடுமியை அறுத்தெரிந்து விட்டு உழைப்பாளி மக்களுக்காக தனது இறுதி மூச்சுவரை பணி யாற்றினார். அவர் எந்த லட்சியத்திற்காக பாடுபட்டாரோ அந்த லட்சியத்தை தொடர்ந்து முன்னெடுப்போம் என்றார். ஜி.நரசிம்மன் (வேலூர் மாவட்டம்) பேசு கையில், தோழர் வி.என்.ஆர். அப்பழுக்கற்ற வர். ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களுடன் தொடர்பில் இருந்தாலும், தான் ஏற்றுக் கொண்ட மார்க்சிய லட்சியத்தை உறுதி யாக பின்பற்றினார். சிறந்த மொழி பெயர்ப்பாளர் என்றார். அலைகள் வெளியீட்டகம் இளங்கோ பேசுகையில், அனைவரிடத்திலும் உரிமை யோடு உரையாடுவார். வேதங்களை மொழி பெயர்த்தவர். மொழி, கலாச்சாரம், அகழ்வாய்வு என அனைத்திலும் ஆய்வு மேற்கொள்வார். பன்முகத்தன்மை கொண்ட வர். அவரது வரலாற்றை ஆவனப்படுத்த வேண்டும் என்றார். சி.பி.ரவிசங்கர் பேசுகையில், யார் எந்த மாதிரி கேள்வி கேட்டாலும் மிகத் தெளிவாக பதிலளிக்கும் ஆற்றல் மிக்கவர் தோழர் வி.என்.ராகவன் என்று குறிப்பிட்டார்.