கள்ளக்குறிச்சி,செப்.11- கள்ளக்குறிச்சி மாவட்டத் திற்கு முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவி யல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகிய நீதிமன்றங் களை விரைந்து அமைக்க வலியுறுத்தி கள்ளக்குறிச்சி யில் வழக்கறிஞர் சங்கம் சார்பாக உண்ணாநிலைப் போராட்டம் நடைபெற்றது. கடந்த 2019 ஆம் ஆண்டு விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து கள்ளக் குறிச்சி புதிய மாவட்டமாக உருவானது. அதனைத் தொடர்ந்து பல்வேறு துறைகள் செயல்படாமல் இருந்த நிலையில் தற்போது அனைத்து துறை அலுவலகங்களிலும் கள்ளக்குறிச்சி மாவட்டத் தில் செயல்பட்டு வருகிறது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகி யும் இதுவரை முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்றம் மற்றும் தலைமை குற்றவி யல் நீதித்துறை நடுவர் மன்றம் ஆகியவை அமைக் கப்படவில்லை. தொடர்ந்து கள்ளக்குறிச்சி வழக்கறிஞர் சங்கத்தினர் பல்வேறு போராட் டங்களில் ஈடுபட்டு வந்த னர். இந்நிலையில் திங்க ளன்று (செப்.11) வழக்கறி ஞர் சங்கத் தலைவர் ராம சாமி தலைமையில் உண்ணாநிலை போராட்டம் நடைபற்றது. போராட்டத் தில் செயலாளர் சீனிவாசன், பொருளாளர் தியாகராஜன் உள்பட ஏராளமான வழக் கறிஞர்கள் பங்கேற்றனர்.