கடலூர், ஏப்.18- நில அளவை, கள அலுவலர்களின் பல்வேறு பணிசுமையை கருத்தில் கொள்ளாமல் நில அளவை யர் முதல், உயர்நிலை அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுத்து வரும் நில அளவை மற்றும் நில வரி திட்ட இயக்குநரின் ஊழியர் விரோத போக்கை கண்டித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப் பின் சார்பில் கருப்பு பட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தலைவர் ராஜ.மகேந்தி ரன் தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் குருமூர்த்தி வரவேற்றார். இணைச் செயலாளர் இரா.விஜயலட்சுமி, கோட்டத் தலைவர் கோதண்டராமன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாவட்டத் தலை வர் டி.ரவிச்சந்திரன், முன்னாள் மாவட்டச் செயலா ளர் கல்யாண சுந்தரம், அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் மாவட்ட துணைத் தலைவர் எஸ்.கருணாகரன், கூட்டுறவுத் துறை ஊழியர் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எஸ்.பால கிருஷ்ணன், மாநில துணைத் தலைவர் கே.ரவி, வட்டாரத் தலைவர் ராமர் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிப் பேசினர். மாவட்டப் பொரு ளாளர் பரந்தாமன் நன்றி கூறினார். அதேபோல் திருவண் ணாமலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே மாவட்டத் தலை வர் மூ.மோகன்ராஜ் தலை மையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், மாநிலத் தலைவர் ராஜா, அரசு ஊழி யர் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.பார்த்திபன் ஆகியோர் பேசினர்.