விழுப்புரம், மே 20- தலித் மக்களுக்கு சுடுகாடு அமைத்து கொடுக்க வேண்டும் என தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது. விழுப்புரம் மாவட்டம், விக்கிர வாண்டி வட்டத்திற்குட்பட்டது கொட்டியாம்பூண்டி. இந்த கிராமத்தின் பிள்ளையார் கோயில் பகுதியில் 50க்கும் மேற்பட்ட தலித் மக்கள் வசிக்கின்றனர். இவர்க ளது குடும்பங்களில் யாராது மரண மடைந்தால் இறுதிச் சடங்கு செய்வதற்கு நிரந்தர இடம் இல்லை. இதனால், அருகே உள்ள சாத்தனூர் ஓடை பகுதியில் இறுதி சடங்கை செய்து வந்தனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு அந்த பகுதி மக்கள் இறுதி சடங்கு செய்வதற்கு நிரந்தர இடம் ஏற்பாடு செய்திடக் கோரி வருவாய் துறை அதிகாரிகளிடம் மனு கொடுத்துள்ள னர். இதனைத் தொடர்ந்து, அதே கிராமத்தில் இடத்தை தேர்வு செய்து கொடுத்துள்ளனர். இதற்கிடையில், 60 வயதான அமுதா என்பவர் உடல் நலக்குறைவால் காலமானார். அரசு அதிகாரிகள் ஒதுக்கி கொடுத்த இடத்தில் ஆதிதிராவிடர் வகுப்பை சார்ந்த அமுதாவின் உடலை அடக்கம் செய்வதற்கு ஏற்பாடு செய்தனர். இதற்கு, அதே கிராமத்தில் வசித்து வரும் 500-க்கும் மேற்பட்ட ஆதிக்க சாதியை சேர்ந்த ஒரு பிரிவு மக்கள் எதிர்ப்பு தெரிவித்தும் இறுதிச் சடங்கு செய்வதை தடுத்துள்ளனர். இதனால் இரு பிரிவினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதையடுத்து கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், விழுப்புரம் துணை கண்காணிப்பாளர் பார்த்திபன், வட்டாட்சியர் இளவரசன் ஆகியோர் தலைமையில் அமைதி பேச்சு நடந்தது. அப்போதும் உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பதற்றம் உருவானது. பிறகு, காவலர்கள் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். தங்களுக்கு நிரந்தரமாக இடம் ஒதுக்கும் வரை உடலை எடுக்க மாட்டோம் தலித் மக்கள் போராட் டத்தை தொடர்ந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டச் செய லாளர் ஏ.சங்கரன், மாவட்டச் தலைவர் எஸ்.முத்துகுமரன், துணைத் தலைவர் ஏ.கிருஷ்ணமூர்த்தி, ஒன்றியச் செய லாளர் வி.கிருஷ்ணராஜ் ஆகியோர் பாதிக்கப்பட்ட தலித் மக்களை சந்தித்து ஆறுதல் கூறினர். மேலும், இறந்தவரின் உடலை அடக்கம் செய்யவும் துணை நின்றனர்.