வேலூர். பிப் 21 - வேலூர் அண்ணா சாலையில் லலிதா ஜூவல்லரி நிறுவனத்தின் 53 ஆவது கிளை திறப்பு விழா வெகு விமர்சையாக நடை பெற்றது. வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கதிர்ஆனந்த் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். வேலூர் சட்டமன்ற உறுப்பினர் ப.கார்த்திகேயன், நறுவீ மருத்துவமனை நிறுவனர் ஜி.வி.சம்பத், மாமன்ற உறுப்பி னர்கள் வி.எஸ்.முருகன், கா.சு.சண்முகம், தவமணி தாமோதரன் ஆகியோர் குத்து விளக்கேற்றி விற்பனையை துவக்கி வைத்தனர். முன்னதாக லலிதா ஜூவல்லரி உரிமையாளர் கிரண்குமார் அனை வரையும் வரவேற்றார். பின்னர் லலிதா ஜூவல்லரி நிர்வாக இயக்குநர் கிரண்குமார் செய்தி யாளர்களிடம் பேசுகையில், வேலூரில் எங்களது 53 ஆவது கிளையை திறந்துள் ளோம். இந்த ஆண்டுக்குள் தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானாவிலும் லலிதா ஜூவல்லரி கிளைகளை திறக்க வுள்ளோம். எங்கள் கடையின் விலையை மற்ற கடையின் விலையுடன் ஒப்பிட்டு எங்கு விலை சரியாக, குறைவாக இருக் கிறதோ? அங்கு நகையை வாங்குங்கள் என்றும் அவர் தன்னம்பிகையோடு தெரிவித்தார்.