districts

img

அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் 50வது ஆண்டு பொன் விழா

அகில இந்திய சாலை போக்குவரத்து தொழிலாளர் சம்மேளனம் 50வது ஆண்டு பொன் விழாவை முன்னிட்டு ஞாயிறன்று (செப்.3) கேரள சமாஜத்தில் ரத்த தான முகாம் நடைபெற்றது. சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்கம் மத்திய சென்னை மாவட்டத் தலைவர் எஸ்.கே.முருகேஷ் தலைமையில் நடைபெற்ற முகாமை சம்மேளன மாநில பொதுச் செயலாளர் வி.குப்புசாமி துவக்கி வைத்தார். ஆட்டோ சங்க மாவட்ட பொதுச் செயலாளர் எஸ். பாலசுப்ரமணியம், சாலை போக்குவரத்து தொழிலாளர் சங்க மாவட்ட நிர்வாகிகள் எம்.உதயகுமார், எம்.முரளி,  ஆர்.ராஜ்மோகன், புருஷோத்தமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.