districts

img

கடலூரில் ரயில்வே அதிகாரிக்கு பாராட்டு

கடலூர், அக்.13-  உழவன், கம்பன், ராமேஸ்வரம், கன்னியாகுமரி, திருப்பதி ஆகிய விரைவு ரயில்கள் கடலூர் நிலையத்தில் நின்று செல்கின்றன. புதிதாக, விழுப்புரம்- சென்னை பயணிகள் ரயில், விருத்தாசலம்- சேலம் , மயிலாடுதுறை- மைசூர் ஆகிய ரயில்களை கடலூர் துறைமுகம் வரை நீட்டிப்பதற்கு  திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் (இயக்கம்) ஹரிக்குமார் ரயில்வே துறைக்கு பரிந்துரை செய்துள்ளார். ஆனால் கடலூரில் ரயில்வே அதி காரிக்கு அனைத்துக் கட்சிகள், பொதுநல அமைப்புகள், குடியிருப்போர் சங்கத்தின் சார்பாக பாராட்டு கூட்டம் நடைபெற்றது.  சிபிஎம் மாவட்டச் செயலாளர் கோ. மாதவன் தலைமை வகித்தார். சட்டமன்ற உறுப்பினர் கோ. ஐயப்பன், மேயர் சுந்தரி ராஜா, துணை மேயர் தாமரைச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பாராட்டி பேசினர். காங்கிரஸ் மாநிலத் துணைத் தலை வர் சந்திரசேகரன், ஓவியர் ரமேஷ், சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ்பாபு, மாநகர செயலாளர் அமர்நாத், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் மாவட்ட துணை செயலாளர் குளோப், விடுதலை சிறுத்தைகள் கட்சி அமைப்புச் செயலாளர்  திரு மாரப்பன், மாவட்ட செயலாளர் செந்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாமன்ற உறுப்பினர் அருள்பாபு, மதிமுக ஜே.ராம லிங்கம், திராவிட கழக மாவட்டச் செய லாளர் எழிலேந்தி, குடியிருப்போர் சங்க சிறப்பு தலைவர் ஆர். மருதவாணன், தேவ நாதன், பொது நல அமைப்பு தலைவர் ரவி, மீனவர் பேரவை நிர்வாகி சுப்புராயன்,  மாற்றுத்திறனாளி சங்கத் தலைவர் ஆள வந்தார், ரயில்வே துறை அதிகாரி பிர பாகரன், திருப்பாப்புலியூர் ரயில்நிலைய அதிகாரி வாசு, ரயில்வே பய ணிகள் சங்கம் நிர்வாகி பிரபாகரன்  உள்ளிட்டோர் பேசினர். நிறைவாக திருச்சி கோட்ட மேலாளர் ஹரிகுமார் ஏற்புரை வழங்கினார்.