மார்க்சிஸ்ட் கட்சியை உருவாக்கிய தலைவர்களில் ஒருவரான தோழர் என்.சங்கரய்யாவுக்கு அனைத்துக் கட்சித் தலைவர்கள் புகழஞ்சலி கூட்டம் ஊத்தங்கரையில் நடைபெற்றது. சிபிஎம் வட்டச் செயலாளர் மகாலிங்கம் தலைமை வகித்தார். அண்ணாமலை, கோபால், எத்திராஜ், வேலு,வெங்கடாசலம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில நிர்வாகி அசோகன், திராவிட கழக மண்டல செயலாளர் பழ.பிரபு உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர்.