ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டத்தை எதிர்த்து குடியநல்லூர்,புது உச்சிமேடு, சிறுவல், கிராம மக்கள் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமையில் கள்ளக்குறிச்சி அருகே உள்ள விருகாவூர் மற்றும் நாகலூர் மின்வாரிய பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஏ.நடராஜன் தலைமையில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஜி.ஆனந்தன் கோரிக்கை விளக்கி பேசினார். என்.தனலட்சுமி, பி.தெய்வீகன், ஆர்.செல்வராஜ், சக்திவேல், பரதன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.