கிருஷ்ணகிரி, ஆக.1-
கிருஷ்ணகிரி போகனப்பள்ளி ஊராட்சிக்கு உட்பட்ட விஐபி நகரில் வசித்து வருபவர் இளங்கோ. இவரது மகன் சந்தோஷ் (36). இவருக்கு திருமண மாகி ரூபி என்கிற மனைவியும், 5 வயதில் ஆத்விக் மகனும், 6 மாத பெண் குழந்தையும் உள்ளனர். சந்தோஷ் கட்டு மான துறையில் கடந்த 12 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார்.
இந்நிலையில், கடந்த 3 ஆண்டுகளாக விஎஸ்எல் இந்தியா என்ற தனியார் நிறு வனத்தில் சீனியர் மேலாளராக பணியாற்றி வந்தார். மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் பாலம் கட்டும் பணியின் போது கிரேன் அறுந்து விழுந்ததில், தமிழகத்தை சேர்ந்த சந்தோஷ், கண்ணன் உட்பட 17 பேர் உயிரிழந்தனர்.
சந்தோஷ் உயிரிழந்த தகவலறிந்து அவரது குடும்பத் தினர் மிகுந்த அதிர்ச்சி யும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், சந்தோஷின் உடல் தாமத மின்றி, விமானம் மூலம் கொண்டு வர தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக சந்தோஷின் குடும்பத்தினர் கூறும்போது, கடந்த 3 ஆண்டுகளாக மும்பையில் பணியாற்றி வந்த சந்தோஷ், தமிழகத்துக்கு இடமாற்றம் கேட்டு வந்தார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு, அந்நிறுவனத் தினர், தமிழகத்துக்கு சந்தோஷை இடமாற்றம் செய்தனர். ஒரு மாதம் கழித்து சென்னையில் உள்ள அலுவலகத்தில் பணியில் சேர இருந்தார். இவ்வாறான நிலையில், செவ்வாயன்று நடந்த கிரேன் விபத்தில் உயிரிழந்த தகவல் அறிந்து மிகுந்த வேதனையடைந்துள்ளோம்.