districts

img

தூறல் போட்டாலே குளமாகும் கிருஷ்ணகிரி பேருந்து நிலையம்

கிருஷ்ணகிரி,அக்.13- கிருஷ்ணகிரி லண்டன் பேட்டையில் உள்ள புதிய பேருந்து நிலையம் 2008 ஆண்டு பிப்ரவரியில் கலைஞர் கருணாநிதி முதல்வ ராகவும், மு.க. ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராகவும் இருந்து போது திறக்கப்பட்டது. மக்கள் தொகை பெருக்கம், போக்கு வரத்து நெரிசல், நகரின் விரிவாக்கம் மிக வேகமாக அதிகரித்துள்ளது. ஆனால், 15 ஆண்டுகளை கடந்த பிறகும், இந்த பேருந்து நிலையத்தின் பழைய கட்ட  மைப்புகள் சிறிதும் மாற்றம் செய்யப்பட வில்லை குறிப்பாக, கட்டண கழிப்பறை ஒன்று மட்டுமே உள்ளது. அதுவும் மிகச் சிறியதாகும். இலவச சிறுநீர் கழிப்பிடம் இல்லை என்பதால் பயணி கள் அவதிப்படுகிறார்கள். ஓட்டுநர் நடத்து நர்கள் உள்ளிட்ட பலரும் பேருந்து நிலை யத்தின் திறந்த வெளியில் சிறுநீர் கழிக்கும் அவலம் தொடர்கிறது. பெண்களின் நிலைமை மிகவும் பரிதா பமாக உள்ளது. மறுபுறத்தில், சிறிது தூறல் போட்டாலே பேருந்து நிலையம் மழை நீர் தேங்கி குள மாக மாறி விடுகிறது. நீர் வடிய ஒரு நாளாகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்ட கழிவுநீர் கால்வாய் தூர்ந்து புதர் மண்டி கிடக்கிறது. இதுகுறித்து துறை மட்டுமின்றி மாவட்ட ஆட்சியர் வரைக்கும் பல முறை புகார் செய்தும் கண்டு கொள்ளவில்லை என்று பயணிகள் கூறுகின்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் ஜி.கே. நஞ்சுண்டன், வட்டச் செயலாளர் ராஜா ஆகியோர் கூறுகையில், கிருஷ்ணகிரி நகர பேருந்து நிலையத்தில் இலவச கழிப்பறை வளாகம் கட்ட வேண்டும், கழிவுநீர் கால்வாயை சீர்படுத்த வேண்டும், பேருந்து நிலை யத்தின் மேற்கூரையை சீர்படுத்த மாவட்ட ஆட்சியர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை திரட்டி போராட்டம் நடத்த திட்ட மிட்டுள்ளோம்”என்றனர்.