districts

கோயம்பேடு சந்தை டெண்டரில் முறைகேடு

சென்னை,ஆக 2-

     சென்னை கோயம்பேடு சந்தையில் கடைகள் டெண்டர் விடுவதில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

     கடந்த 2019 ஆம் ஆண்டு சந்தையில் உள்ள கடைகள் டெண்டர் விட்ட போது உணவகம் அமைப்பதற்கான இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்தை செந்தில்குமார் என்பவருக்கு பதிவு செய்து கொடுத்து முறைகேட்டில் ஈடுபட்டு இருப்பதாக சி.எம்.டி.ஏ பொறியாளர் சீனிவாசராவ் உட்பட இருவர் மீது குற்றம்  சாட்டப்பட்டது. இதன் பேரில் லஞ்ச ஒழிப்பு காவல்துறையி னர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த முறைகேடு காரணமாக அரசுக்கு ரூ. 86.87 லட்சம் இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டு எழுந்துள்ளது.