districts

கோயம்பேடு வணிக வளாகம் மாற்றுவதற்கு பேரமைப்பு எதிர்ப்பு

சென்னை, ஆக. 18-

      கோயம்பேடு வணிக வளாகம் திரு மழிசைக்கு மாற்றம் செய்வதற்கு தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேர மைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

     இதுகுறித்து மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:        

     கொரோனா பேரிடர் காலத்தில் கோயம்பேடு வணிக வளாகம் மூடப் பட்டு, தற்காலிகமாக திருமழிசைக்கு மாற்றப்பட்டபோது, அதனால், ஏற்பட்ட இழப்புகளும் இடையூறுகளும் பொது மக்களுக்கும் வணிகர்களுக்கும் ஏராளம் என்பது ஏற்கெனவே அரசின் கவனத்திற்கு மிகவும் அழுத்தமாக தெரி விக்கப்பட்டது.  அதன் காரணமாக திரு மழிசையில் தற்காலிகமாக இயங்கி வந்த காய்கறி சந்தை மீண்டும் கோயம் பேடுக்கு கொண்டு வரப்பட்டது. அதன் பின்னர் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தினால் வணிக வளாகம் மேம்படுத்தப்பட்டு, தற்போது சுமூக மான முறையில் இயங்கிக் கொண்டி ருக்கின்றது.

     இந்நிலையில், ஊடகங்கள் மற்றும் பத்திரிகை செய்திகள் வாயிலாக கோய ம்பேடு வணிக வளாகம் மீண்டும் திரு மிழிசைக்கு மாற்றுவதற்கு சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம், தனியார்  நிறுவனம் ஒன்றிடமிருந்து ஆலோச னைகள் கேட்டிருப்பதாகவும், 85 ஏக்கர்  பரப்பளவுள்ள கோயம்பேடு வணிக வளாகத்தில், மல்டி பிளஸ் தியேட்டர் கள், மால்கள், ஸ்டார் ஓட்டல்கள், போன்ற பல்வேறு வகை மேம்படுத் தப்பட்ட வளாகம் ஒன்றை உருவாக்க சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் முயற்சிப்பதாக தெரிய வருகிறது. இத னால் கோயம்பேடு சந்தையில் சொந்த மாக கடை வைத்து வணிகம் செய்து வரு பவர்கள் மிகப்பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியிருக்கின்றனர்.

     பெருநகர வளர்ச்சிக் குழுமம் கவன த்தில் கொண்டு, அதனை தடுத்து நிறுத்தி கோயம்பேடு வணிகர்களின் வாழ்வாதாரத்தைக் காத்திடவும், அதனை நம்பியிருக்கும் பல்லாயிரக் கணக்கான கூலித் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாத்திட வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.