விழுப்புரம் மாவட்டம், முகையூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொங்கராயனூர் - விழுப்புரம் இடையே புதிய பேருந்து சேவையை உயர்கல்வித்துறை அமைச்சர் முனைவர் க.பொன்முடி துவக்கி வைத்தார். மாவட்ட ஆட்சியர் சி.பழனி, சட்டமன்ற உறுப்பினர்கள் நா.புகழேந்தி, கூடுதல் ஆட்சியர் (மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை) சித்ரா விஜயன், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினர்கள் ஆர்.ராஜீவ்காந்தி, ரவிச்சந்திரன், விஸ்வநாதன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.