சென்னை, பிப். 22 - கொடுங்கையூர் குப்பைக் கிடங்கில் பயோ மைனிங் திட்டத்தை சனிக் கிழமையன்று (பிப்.22) முதலமைச்சர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்கிறார். கொடுங்கையூர் குப்பைக் கொட்டும் வளா கம் சுமார் 252 ஏக்கர் நிலப்பரப்பில் அமைந் துள்ளது. 40 ஆண்டுகளுக்கு இங்கு குப்பை கொட்டப் பட்டு வருகிறது. இந்த கழிவுகளில் இருந்து சுமார் 66.52 லட்சம் மெட்ரிக் டன் திடக் கழிவுகளை பயோ மைனிங் முறையில் அகழ்ந்தெடுத்து நிலத்தை மீட்டெடுக்க ரூ.640 கோடி மதிப்பில் புதிய திட்டத்தை சென்னை மாநகராட்சி அறிவித்திருந்தது. தூய்மை இந்தியா திட்ட நிதி, மாநில அரசு நிதி மற்றும் பெருநகர சென்னை மாநகராட்சி நிதி பங்களிப்பின் மூலம் பயோ- மைனிங் முறையில் ஆறு சிப்பங்களாக பிரிக்கப்பட்டு மூன்று தனியார் நிறுவனங் களுக்கு பணிகளை மேற்கொள்ள ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தை முதல் வர் ஸ்டாலின் அடிக்கல் நாட்டி தொடங்கி வைக்க உள்ளதாக தகவல் வெளி யாகியுள்ளது. இந்தப் பணிகள் அண்ணா பல் கலைக் கழகத்தின் தொழில் நுட்ப வல்லுநர்களை உள்ளடக்கிய திட்ட கண்காணிப்புக் குழுவின் மூலம் மேற்கொள்ளப்பட உள்ளது. இப்பணிகள் இரண்டு ஆண்டுகளுக்குள் நிறைவு பெற்று நிலம் மீட்டெ டுக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்து ள்ளது. இது தொடர்பான தீர்மானம் மாநகராட்சி மாமன்றக் கூட்டத்தில் நிறைவேற்றப் பட்டுள்ளது.