மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 31) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் தென் சென்னை கிளை 1, 2 சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், செயலாளர்கள் பண்டாரம் பிள்ளை (கிளை-1), கௌதமன் (கிளை 2), உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில அமைப்பாளர் விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவ கிருபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.