districts

img

மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி கே.கே.நகர் மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்

மணிப்பூரில் அமைதியை கொண்டு வர வலியுறுத்தி திங்களன்று (ஜூலை 31) கே.கே.நகர் மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு மின்வாரிய ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின்  தென் சென்னை கிளை 1, 2 சார்பில் இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் சென்னை மண்டலச் செயலாளர் ஏ.முருகானந்தம், செயலாளர்கள் பண்டாரம் பிள்ளை (கிளை-1), கௌதமன் (கிளை 2), உழைக்கும் பெண்கள் ஒருங்கிணைப்புக் குழு மாநில அமைப்பாளர் விஜயலட்சுமி, மாநில செயற்குழு உறுப்பினர் ஹெலன் தேவ கிருபை உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.