தில்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்துள்ள ஒன்றிய பாஜக அரசின் பழிவாங்கும் நடவடிக்கையை கண்டித்து வெள்ளியன்று (மார்ச் 22) தெற்கு ரயில்வே பொது மேலாளர் அலுவலகம் முன்பு திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தயாநிதி மாறன் எம்.பி., தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, தாயகம் கவி எம்எல்ஏ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.